districts

img

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் நகர்ப்புற விரிவாக்கத்தை மேற்கொள்க! சிபிஎம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.6 - மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் நகர்ப்புற விரி வாக்கத்தை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது

திருச்சி மாநகராட்சி 25 ஆவது வார்டுக்குட்பட்ட உய்யக்கொண்டான் பகுதி யில் உள்ள ஆதிநகர், சாந்த  ஷீலா நகரில் 40 ஆண்டு களுக்கு மேல் பத்தாயிரத்திற் கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தங்களது வீடு களுக்கு மின், குடிநீர் இணைப்பு பெற்றும் வீட்டு  வரி செலுத்தியும் வருகின்ற னர். 

இப்பகுதி, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சாந்த ஷீலாவால் பட்டா வழங்கப் பட்ட பகுதிகளாகும். தற் போது நகர்ப்புற விரிவாக் கம் என்ற பெயரில் இங்கு உள்ள வீடுகளை இடிக்க முயற்சிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், ஆதிநகர், சாந்த ஷீலாநகர் பகுதி மக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் நகர்ப்புற  விரிவாக்கத்தை மேற்கொள்ள  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதிக்குழு சார்பில்  வெள்ளியன்று கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆறு முகம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அஹமது, மாவட்டக் குழு உறுப்பினர்கள் அன்வர் உசேன், சீனிவாசன் ஆகி யோர் பேசினர். இதில் பகுதிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பகுதிக் குழு உறுப்பினர் பழனி யப்பன் நன்றி கூறினார்.