districts

img

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிக்கு இதய ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை

அரசு மருத்துவர்கள் சாதனை மதுரை, ஜூன் 11-  மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம்  மல்லப்புரத்தை சேர்ந்தவர் சேகர் (68). கடந்த சில நாட்களாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனை தொட ர்ந்து அவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த தில், நெஞ்சு பகுதியின் மகாதமனி ரத்தக்  குழாய் வீக்கம் அடைந்து வெடிக்கும் தரு வாயில் இருந்தது தெரியவந்தது. அங்கு சிகிச்சைகள் புறக்கணிக்கப்பட்டதாலும், கூடுதல் செவலாகும் என்பதாலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இங்கு, அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிக்கலான இருதய அறுவை சிகிச்சையை செய்து மருத்துவர்கள் குழு சாதனை படைத்துள்ளனர். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். இதுகுறித்து அரசு மருத்துவமனை முதல்வர் மரு. தர்மராஜ் கூறியதாவது: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட முதியவரை, மருத்துவர்கள் பரிசோதித்தபோது, இருதய  ரத்தகுழாய் அடைப்பும், இருதய அடைப்  பும் ஏற்கனவே இருப்பது கண்டறியப்பட் டது. இரண்டு உயிருக்கு ஆபத்தான பாதிப்பு களுடன் இருக்கும் அவருக்கு ஓபன் ஹார்ட்  சர்ஜரி சிகிச்சை மிகவும் ஆபத்தானது. இதனால், ரத்த குழாய் தமனி வீக்கத்திற்கு, ரத்த குழாய் வழியே கருவிகள் மூலம் அதி  நவீன ஸ்டெண்டுகளை பொருத்த முடிவு  செய்தனர். மேலும், ஸ்டெண்டு பொருத்தும்  முன்பு, ரத்தகுழாய் வீக்கம் கழுத்து பகுதி  வரை வளர்ந்து விட்டதால், அதற்கு தனி யாக கழுத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை யும், இருதய ரத்த குழாய் அடைப்பிற்கு  கூடுதலாக ஸ்டெண்டும் வைக்க வேண்டிய திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 8 மணி நேர அறுவை சிகிச்சை சிக்கலான இந்த 3 சிகிச்சைகளையும் செய்ய இருதய அறுவை சிகிச்சை நிபு ணர்கள், இருதய சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கிய குழு  அமைக்கப்பட்டது. அந்த குழுவினர், கழுத்து பகுதி பைபாஸ் சிகிச்சை, இருதய  ஸ்டெண்ட் சிகிச்சை, மகாதமனி வீக்கத்திற்  கான ஸ்டெண்ட் சிகிச்சை ஆகிய மூன்றை யும் ஒரே தடவையாக 8 மணி நேரம் கேத்லேப் மற்றும் அறுவை சிகிச்சை அறையில் வைத்து வெற்றி கரமாக செய்து  முடித்தனர். சிகிச்சை முடிந்த 6 மணி நேரத்தில் அந்த நோயாளியால் எழுந்து நடமாட முடிந்தது. அதிக ரத்த போக்கு, மாரடைப்பு, பக்க வாதம், உயிரிழப்பு போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சிகிச்சை முறையை செய்த மருத்துவர்கள் மார்வின்,  அமிர்தராஜ், மீனாட்சி சுந்தரம், முத்து குமார், பாலசுப்பிரமணயம், செல்வராணி, ரமேஷ், இளமாறன், கல்யாண சுந்தரம்  தலைமையிலான குழுவினரை பாராட்டு கிறேன். தென் தமிழகத்தில் முதல் முறையாக இந்த சிகிச்சை முறை மதுரை அரசு  ராஜாஜி மருத்துவமனையில் செய்யப்  பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை களில் இதுபோன்ற சிகிச்சைகள் மேற்  கொள்ள ரூ. 25 லட்சம் வரை செலவாகும்.  அரசு மருத்துவமனையில் முதல்- அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.