திருநெல்வேலி, ஜூலை 24-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேலப் பாளையம் பகுதிக்குழு செயலாளர் குழந்தைவேலு மற்றும் கட்சியினர் திங்கட்கிழமை நெல்லை மாவட்ட நிர்வா கத்தை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று வழங்கினர்.
அந்த மனுவில்- சேரன்மகாதேவி வட்டம் ஓமநல்லூர் கிராமத்தில் பல்வேறு சமூ கத்தை சேர்ந்த சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் உள்ள கல்குவாரியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கனரக வாகனங் களை இயக்கப்படு கின்றன. இந்த வாக னங்களில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பாரம் ஏற்றப்பட்டு மிகச் சிறிய சாலையில் அதிக வேகமாக செல்வது வாடிக்கையாக உள்ளது .வேகமாக செல்லும் கனரக வாக னங்களால் சாலை சிதிலமடைவதும் எதிரே வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளா வதும் வாடிக்கையாக உள்ளது. இது தவிர கல்குவாரிகளில் சக்தி வாய்ந்த வெடிகள் வைத்து பாறைகள் தகர்க்கப் படுவதால் இங்கு உள்ள மக்கள் பாதிக்கப்படுகின்ற னர். இது குறித்து பாதிக்கப்பட்ட செல்வகுமார் என்பவர் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் பச்சையாற்றில் 2017ல் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் நலனு க்காக பாலம் கட்டப்பட்டது. கனரக வாகனங்கள் அந்த பாலத்தில் செல்வ தால் பாலம் பழுதடைந்து சேதமாகும் சூழலில் உள்ளது .இதே நிலை நீடித்தால் அனைவரும் இந்த ஊரை விட்டு காலி செய்யும் சூழல் உள்ளது. எனவே கல்குவாரியால் பாதிக்கப்பட்ட மேல ஓமநல்லூர் கிராமத்திற்கு சிறப்பு உதவி தொகை திட்டங்கள் மூலம் பாமர விவசாயிகளின் கூலிகளின் வாழ்வா தாரத்தை மாவட்ட நிர்வாகம் உயர்த்த வேண்டும். அதோடு கல்குவாரி அனும தியை ரத்து செய்து ஓமநல்லூர் ஊரை மாவட்ட நிர்வாகம் காப்பாற்ற வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.