பொன்னமராவதி, ஜூலை 28 -
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றி யத்தில் காரையூர், கீழத்தானியம், மேலத்தானியம், சடை யம்பட்டி, ஆலவயல், பொன்-புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வலையபட்டி, ஒலியமங்கலம், திருக்க ளம்பூர் ஆகிய இடங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். ஆட்சியர் மெர்சி ரம்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாட்ஷா, வட்டாட்சியர் பிரகாஷ், பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.