திருச்சிராப்பள்ளி, ஜன.8- கங்கைகொண்டசோழபுரம் கோவிலைச் சுற்றி புறவழிச்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு களை ஆய்வு செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதிகப் போக்குவரத்து காரண மாக உலக பாரம்பரிய நினைவுச் சின்னத்தை சேதப்படுத்தாமல் பாது காக்கவேண்டுமென உள்ளூர் மக்களின் கோரிக்கையை அடுத்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரக தீஸ்வரர் கோவிலிலிருந்து போக்கு வரத்தை மாற்றி, திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கும் வகையில புறவழிச் சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. புறவழிச்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்ப டும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணை வட்டாரங்கள் தெரி விக்கின்றன. விக்கிரவாண்டி-கும்ப கோணம் நெடுஞ்சாலை சந்திப்பு வரை சுமார் 2.5 கி.மீ., தூரத்திற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் நெடுஞ் சாலைத்துறை ஆணையம் ஆய்வு செய்வோம் எனக் கூறியுள்ளது. 11-ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்ட இந் சிவன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல் கின்றனர். 1832- ஆம் ஆண்டு ஆங்கிலே யர்கள் இந்தக் கோவிலிலிருந்தும் அதன் உள் மற்றும் வெளிப் பிரகாரத்தி லிருந்தும் பிரித்தெடுக்கப்பட்ட கற் களை எடுத்துச் செல்ல கோவிலுக்கு அருகில் சாலையை அமைத்தனர். இந்தச் சாலை இப்போது நெடுஞ் சாலைத்துறை ஆணையத்தின் கீழ் உள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் இந்தச் சாலையை கோவிலின் உள் இரண்டாவது பிரகார மாக கருதுகின்றனர். தற்போது கோவிலை ஒட்டி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணி முடிந்ததும், சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரிக் கும், இதனால் இந்த கோவில் மாசடை யும். குறிப்பாக கோவில் வளாகத்தில் உள்ள அரிய கல்வெட்டுகள் வாக னங்களில் இருந்து வெளியேறும் புகையால் சேதமடைய வாய்ப் புள்ளது என்கிறார் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு கவுன்சில் அறக்கட்டளை தலைவர் கோமகன். கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் கோவில்கங்கை சமவெளி வரை இராஜேந்திர சோழனால் (கிமு1012-1044) கட்டப்பட்டது.