தஞ்சாவூர், நவ.4 - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கோட்டாரப்பட்டி கிராமத்திற்கு பேருந்து வசதியினை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முர சொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கோட்டாரப்பட்டி பள்ளி, மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில், தஞ்சாவூர்-2 கிளை மூலம், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் நகரப் பேருந்து தடம் எண்-B27 காலை மற்றும் மாலை நேரங்களில் தொண்டராயன்பாடி வழியாக கோட்டாரப்பட்டி வரை தட நீட்டிப்பு செய்து திங்கள்கிழமை முதல் இயக்கப்படு கிறது. கோட்டாரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, பூதலூர் ஒன்றி யக் குழுத் தலைவர் கல்லணை செல்லக் கண்ணு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் எஸ்.ஸ்ரீதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.