அறந்தாங்கி, அக்.8 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை கிராமத்தில், ஜீஇஎம் போர்ட் பாய்ஸ் சார்பாக, முதலாம் ஆண்டு வெள்ளி தார் கம்புக்கான மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, வெண்கல குத்துவிளக்கு, கோப்பைகள் வழங்கப்பட்டன. அறந்தாங்கி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.