districts

img

பிராமணவயல் கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம்

அறந்தாங்கி, ஜூலை 8 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பிராமணவயல் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் வருடாபிஷேக விழாவையொட்டி, முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.  இந்தப் போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. போட்டி பெரிய மாடு, நடு  மாடு, கரிச்சான் மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து  கொண்டன. இரட்டை மாட்டு வண்டிகள், நிர்ணயிக்கப் பட்ட பந்தய இலக்கினை நோக்கி ஒன்றையொன்று முந்திச்  சென்றன. போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவு களிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.1.14 லட்சம் ரொக்கப் பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.