districts

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருநெல்வேலி ,ஆக 6-

      நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள  கீழ தென்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்லையா.  இவரது மனைவி மீனா. செல்லையா கடந்த 10-ந்தேதிக்கு  முன்பு இறந்து விட்டார். மீனா தனியாக வசித்து வந்தார்.  சம்பவத்தன்று அவரை விஷ பூச்சி கடித்து விட்டது. இத னால் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற  அவர் சனிக்கிழமை மாலை வீட்டுக்கு சென்றார். அப்போது  வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 2½ பவுன் தங்க செயின் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.