districts

img

பெரியார் மணியம்மை நிறுவனத்தில் புத்தக நன்கொடை வழங்கும் விழா

தஞ்சாவூர், ஏப்.24-  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் அர்ஜுன் சிங் நூலகம், கல்வியியல் துறை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பெரியார் சமுதாய வானொலி இணைந்து உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்தை கொண்டாடின.  அந்த வகையில், பெரியார் கல்வி நிறுவனங்களால் நன்கொடையாக பெற்ற புத்தகங்களை வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயி லும் மாணவர்களுக்கு புத்தக நன்கொடை  வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை தஞ்சையை அடுத்த வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது. புத்தக நன்கொடை வழங்கும்  விழாவிற்கு, வல்லம் பேரூராட்சித் தலை வர் செல்வராணி கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் மாவட்ட நூலக அலுவலர் பா.முத்து, புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் உரை யாற்றினார். தொடர்ந்து, பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து  உரையாற்றினார்.  தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர் மதன்குமார், பள்ளி மாண வர்களுக்கு பள்ளி பாடப் புத்தகத்தை படிப்பதோடு மட்டுமல்லாமல், பிற நூல்களையும் படிக்க வேண்டும். அதன்  மூலம் வாழ்வில் எப்படி வெற்றி பெற லாம் எனக் கூறினார்.  500 நன்கொடை புத்தகங்களை பெரி யார் மணியம்மை அறிவியல் மற்றும்  தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வெ.இராமச் சந்திரன், தஞ்சை மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார்  ஆகியோர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கி னர். முன்னதாக பல்கலைக்கழக அர்ஜுன் சிங் நூலகத்தின் இயக்குநர் த.நர்மதா  வரவேற்றார். வல்லம் அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளியின் தலைமை யாசிரியர் வை.சிவசங்கரி நன்றி கூறி னார்.

;