districts

img

கலைத் திருவிழா போட்டிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற பரணி வித்யாலயா

கரூர், அக்.27 - சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இளைஞர் அமைப்பான கரூர் மாவட்ட ரோட்ராக்ட் சங்கம் சார்பில் 28 ஆம் ஆண்டு கலைத் திருவிழா (எக்ஸ்ட்ரா வேகன்ஸா) சுருதி மஹா லில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள 20 பள்ளி களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைத் திருவிழாவில் பரணி வித்யாலயா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்  வென்று சாதனை படைத்தது.  தனிநபர் வாய்ப்பாட்டு, தனிநபர் இசைக் கருவி வாசித்தல், பேச்சுப் போட்டி, கட்டு ரைப் போட்டி, ஓவியம், நாடகம், கைப்பேசி யினால் ஏற்படும் தீமைகள் குறித்த ஆய்வ றிக்கை சமர்ப்பித்தல், குழு நடனம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் பரணி வித்யாலயா தனிநபர் வாய்ப்பாட்டு, ஓவியப்  போட்டி, கட்டுரைப்போட்டியில் முதலிட மும், பேச்சுப் போட்டியில் 2 ஆம் இடமும், தனி நபர் இசைக்கருவி வாசித்தல், குழு நட னத்தில் 3 ஆம் இடமும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். பரணி  பார்க் நடனம், நாடகத்தில் முதலிடமும், கட்டு ரைப் போட்டியில் 3 ஆம் இடமும் பெற்றனர்.  மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத்  திருவிழாவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற பரணி  பார்க் கல்விக் குழும  மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழா விற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.மோகன ரங்கன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட  ரோட்டராக்ட் சங்கத் தலைவர் ஆர்.ஜீவா னந்தன் சிறப்புரையாற்றினார்.  செயலர் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் அறங்காவலர் சுபாஷினி அசோக் சங்கர் மாவட்ட அளவில் சாம்பியன் பட்டம்  வென்ற பரணி மாணவ, மாணவியர்களை யும் சாதனைக்கு உறுதுணையாக இருந்த  முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ர மணியன்,  பரணி வித்யாலயா முதல்வர் எஸ். சுதாதேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா,  ஒருங்கிணைப்பாளர் சி.ஜெர்லின் கிரிஸ்டல்,  பரணி பார்க் முதல்வர் கே. சேகர், துணை  முதல்வர் ஜி.நவீன்குமார், ஒருங்கிணைப்பா ளர்கள் வி.பானுப்பிரியா, எ.கணேசன் மற்றும்  ஆசிரியர்களைப் பாராட்டி பரிசளித்தனர்.