புதுக்கோட்டை, ஆக.6 - நகராட்சி தூய்மைப் பணி மற்றும் இதர பிரிவு பணிகளுக்கு அவுட் சோர்சிங், தனியார்மய அரசாணை களைத் திரும்பப் பெற வலியுறுத்தி புதுக்கோட்டையில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட் சித் துறை தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் அ.முத்தையா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் ஏ.ஸ்ரீதர், சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் க.முகமதலி ஜின்னா, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.அன்புமணவாளன், துணைச் செயலாளர்கள் சி.மாரிக்கண்ணு, க. ரெத்தினவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நகராட்சி தூய்மைப் பணி மற்றும் இதர பிரிவு பணிகளுக்கு அவுட் சோர்சிங், தனியார்மய அரசாணை களைத் திரும்பப் பெற வேண்டும். மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலி சம்பளத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். வருங்கால வைப்பு நிதிக் காக பிடித்த தொகையை உரிய நிறுவனங்களிடம் செலுத்த வேண்டும். பறிக்கப்பட்ட சரண்டர் ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். ஓய்வூதியப் பலன்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்களை தடையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.