தஞ்சாவூர், மார்ச் 1- மன்னார் வளைகுடாவில் காணப்படும் அரிய வகை உயிரினமான கடல்பசுக்களை பாதுகாக்க பொது மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி தெரிவித்தார். தஞ்சாவூரில் வெள்ளியன்று தமிழ்நாடு வனத் துறை சார்பில் கடற்பசு பாதுகாப்பு குறித்த கருத்த ரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்தை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி துவக்கி வைத்து பேசுகையில், “உலகிலேயே மிக வும் அரிதான கடல்வாழ் பாலூட்டி வகையைச் சேர்ந்த உயிரினம் கடல்பசு. அபூர்வமான இந்த கடல்பசு, தஞ்சா வூர் மாவட்டத்தில் மல்லிப்பட்டினம் அருகே மனோரா பகுதியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தை ஒட்டியுள்ள கடலோரப் பகுதியிலும் சுமார் 150 எண்ணிக்கையில் காணப்படுகிறது. இதனை ஆய்வின்மூலம் தெரிந்து கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் இப்பகுதியை உலகின் முதல் கடல்பசு காப்பகமாக அறிவித்துள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தனித்துவமிக்க உயிரினமான இந்த கடல்பசு வாழ்வ தற்கு ஏற்புடைய சூழல் இங்கு அமைந்துள்ளது சிறப்பாக ஒன்றாக கருதப்படுகிறது. ஆழம் குறைவான கடற்பகுதி, அலைகள் மிதமான கடலோரப் பகுதி, தூய்மை மிகு கடற்பகுதி மற்றும் இந்த கடல்பசுவுக்கு உகந்த கடற்தாழை எனும் அரிய புல் வகை காணப்படுகிற பகுதியாக உள்ளது. அதேபோல் இப்பகுதியில் கடல்பசு இனப்பெருக்கம் செய்யவும், குட்டிபோட்டு பாலூட்டுவதற்கும், இரையை உட்கொள்ள வும் தனது இனத்தை தக்கவைத்துக் கொள்ளும் பருவ சூழ்நிலையும் அமைந்துள்ளது. உலகில் அழிந்து வரும் இந்த கடல்பசு இனம், நம் கடலோரப் பகுதியில் அதிகமாக வசிக்கிறது. மீனவர்களின் வலைகளில் சிக்கியும், படகுகளில் மோதியும், பிளாஸ்டிக், கண்ணாடி பொருட்களால் இந்த கடல்பசுக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இந்த இனத்தை பாதுகாக்க, மீனவர்கள் மற்றும் பொது மக்களுக்கு உரிய விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப் படும்” என்றார். கடல்பசுக்கள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த இக்கருத்தரங்கில், தேசிய கடல் ஆராய்ச்சி மையத்தின் திட்ட விஞ்ஞானிகள் ருக்மினி ஷேகர், ஆனந்த் பாண்டே, சத்தியபாமா கல்லூரி கடல் ஆராய்ச்சித் துறை பேராசிரியர் அமித்குமார், ஓம்கார் பவுண்டேசன் தன்னார்வ அமைப்பின் இயக்குநர் வி. பாலாஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் மற்றும் வனத்துறை, கால்நடைதுறை, மீன் வளத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மனோரா பகுதியைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதி களுக்கு கடல்பசுக்களை பாதுகாப்பது தொடர்பான விழிப் புணர்வு கையேடுகளும், நினைவுப் பரிசுகளும் வழங்கப் பட்டன.