அரியலூர், ஆக.5 -
அரியலூர் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் குறைந்த வட்டியில் கடன் பெற மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக் குழுக்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அரியலூர் நகர கூட்டுறவு வங்கி மற்றும் திருச்சி ராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 9 கிளைகள் மூலமாக கடன் வழங்கப்படுகிறது.
பயிர்கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டுக்கடன் (டாப்செட்கோ), சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக்கடன் (டாம்கோ), ஆதிதிராவிடர் நலக் கடன் (தாட்கோ), கைவினைக் கலைஞர்களின் பொருளா தாரத்தை மேம்படுத்த, அவர்கள் தம் தொழி லுக்கு தேவையான மூலப்பொருள்கள், இயந்தி ரங்கள் வாங்க (டாம்கோ), சுயஉதவிக்குழு கடன் போன்ற கடன்கள் தனிநபர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் வரையிலும் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நபர் ஒரு வருக்கு வீட்டுக் கடன் மற்றும் வீட்டு அடமான கடன், சுய உதவிக்குழு ஒன்றுக்கு அதிகபட்ச மாக ரூ.20 லட்சம் வரையிலும், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரையிலும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் கடன் கோரும் பயனாளிகள், தங்கள் ஆதார், குடும்ப அட்டை நகல், வருமானச் சான்று, பிறப்பிடச் சான்று, சாதிச் சான்றிதழ், தொழில் வரி ரசீது மற்றும் இதர ஆவணங்களை சமர்ப்பித்து கடன்களை பெறலாம்.
மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களுடன் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அட்டையை சமர்ப்பித்து கடன் பெறலாம். மேலும், இதுகுறித்த தகவல்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் திருச்சி ராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 9 கிளைகளை தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலா ளர் (அரியலூர்) - 8903811484, கள மேலாளர் (ஜெயங்கொண்டம்) - 8903811485, உதவி பொது மேலாளர் (வங்கியியல்) - 82208 22208 ஆகியோரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்” என்றார்.