புதுக்கோட்டை, ஜூலை 20-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலை ஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளது:
முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் ஜூலை 24.-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நடைபெறும். நியாய விலைக் கடைப் பணியாளர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டிற்கு வந்து நேரடியாக வழங்குவார். விண்ணப்பங்க ளைப் பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வரத் தேவையில்லை.
விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண் டும். விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரை நடை பெறும்.
விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப் படும். பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒரு முறை கடவுச்சொல் பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப் பட்டு இருந்தால், அந்த கைபேசியை முகா மிற்கு எடுத்து வருவது விண்ணப்பப் பதிவை எளிமைப்படுத்தும்.
குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்க லாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04322-295022, வாட்ஸ்அப் எண் 94450 45622-ஐ தொடர்பு கொள்ளலாம்.