districts

img

பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பன்னாட்டு கருத்தரங்கம்

தஞ்சாவூர், அக்.9-  தஞ்சாவூர் அருகே உள்ள  வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  நிறுவனத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பன்னாட்டு கருத் தரங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் வேலுச்சாமி முன்னி லையில் நடைபெற்றது.  வழக்கறிஞர் மதிவதனி, ‘மகளிர் உரிமை ஆட்சி மாண்பா ளர்’ என்ற தலைப்பில் பேசினார்.  கருத்தரங்கில் பேராசிரியர் கரு ணானந்தம், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் பேசினர்.  திராவிடர் கழகத் தலை வரும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தரு மான கி.வீரமணி பேசுகையில், “அண்ணாவிற்கு பிறகு கலை ஞர்தான் தலைவராக வர வேண்டும் என்று பெரியார் விரும் பினார். கலைஞர்கூட தயங்கி னார். ஆனால் பெரியார் மிகச்  சரியாக மதிப்பீடு செய்தார். பேர றிஞர் அண்ணா கலைஞரைப் பற்றி துல்லியமாக குறிப்பிட் டார். அதில், ‘என்னுடைய தம்பி கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்து படு என்று சொன் னாலும், கோட்டைக்கு போக வேண்டும் என்று சொன்னாலும், பாளையங்கோட்டை சிறைக்கு  போக வேண்டும் என்று சொன் னாலும் எல்லாவற்றையும் ஒன்றாக மதிப்பவன்’ என்று கூறி னார். இந்த சிறப்பு எவருக்கும் கிடைக்காது” என்றார்.  பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீவித்யா வரவேற்றார். மாணவி அபிநயா நன்றி கூறினார். இதில்  ஏராளமான மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.  பிற்பகலில் ஆய்வரங்கம் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் உதயச்சந்திரன், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ்பிரவீன், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக பேரா சிரியர் விஜயலட்சுமி ஆகியோர்  பேசினர். மதுரை காமராஜர்  பல்கலைக்கழக பேராசிரி யர் ராமகிருஷ்ணன் நிறைவுரை யாற்றினார்.  மூன்று அமர்வுகளில் 45 அறி ஞர்கள் கட்டுரைகளை வழங்கி னர். ஆய்வாளர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.