திருச்சிராப்பள்ளி, ஆக.3-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குச் சொந்தமான அரியமங்கலம் குப்பைக் கிடங்கு 47 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தக் கிடங்கில் சுமார் 60 அடி உயரத்தில் இருந்த 70 சதவீதக் குப்பைகள் சுமார் ரூ 60 கோடி செலவில் மறு சுழற்சி செய்யப் பட்டுவிட்டன.
எஞ்சியிருந்த 30 சதவீதக் குப்பைகள் தீப்பற்றி எரியத்தொடங்கின. அது ஆறு நாட்கள் தொடர்ந்து எரிந்தமு. தீ கடந்த ஏழு நாட்களுக்கு முன்பாக அணைக்கப் பட்ட நிலையில், வியாழனன்று மீண்டும் அதே குப்பைகள் தீப்பற்றி எரியத்தொடங்கி யது.
இதிலிருந்து வெளியேறிய புகைமூட்டத் தால், அரியமங்கலம்-அம்பிகாபுரம்- கல்கண்டார் கோட்டை இடையிலான மாநில நெடுஞ்சாலையிலும், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையிலும் வாகன ஓட்டி கள், சுவாசிக்க முடியாமலும், வாகனங் களை இயக்கமுடியாமலும் அவதிப்பட்ட னர்.
காற்றின் வேகத்தால், காமராஜ் நகர், ரயில் நகர், காட்டூர், பாலாஜி நகர், வேங்கூர், திருவெறும்பூர் என சுமார் 10கிலோமிட்டர் தூரத்திற்குள் இருந்த குடியிருப்புகளை புகைமூட்டம் சூழ்ந்தது. இப்பகுதி மக்க ளுக்கு சுவாசப் பிரச்சனைக்கு உள்ளாயினர்.
தீ மற்றும் புகையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், திருச்சிராப்பள்ளி மாநக ராட்சிக்குச் சொந்தமான மூன்று குடிநீர் டேங்கர் லாரிகள், இரண்டு ஜே.சி.பி வாக னங்கள், ஒரு தீயணைப்பு வாகனம், பத்திற் கும் மேற்பட்ட மீட்புப்படை வீரர்கள், மாநக ராட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஊழி யர்கள் ஈடுபட்டனர்.