எல்ஐசி வார விழா: எம்.ஆர். கல்லூரியில் கருத்தரங்கம்
அரியலூர், செப். 8- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத் துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங் களின் சார்பாக இந்திய பொருளாதார வளர்ச்சியில் இந்திய காப்பீட்டு கழகத்தின் (எல்ஐசி) பங்களிப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. தாளா ளர் எம்.ஆர்.இரகுநாதன் தலைமை வகித்தார். முதல்வர் சங்கீதா முன்னிலை வகித்தார். பேராசிரியர் மோகன் வர வேற்றார். இந்திய ஆயுள் காப்பீட்டு அலுவலர் ஆர்.ஜி. மணவாளன் சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் வணிக வியல், வணிக நிர்வாகவியல் துறை மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
அரியலூர் அரசு கல்லூரியில் செப்.11இல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
அரியலூர், செப்.8- அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் 2023-2024 ஆம் கல்வியாண்டின் முதுகலை மற்றும் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 11 அன்று நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் ஜோ.டோமினிக் அமல்ராஜ் தெரிவிக்கையில், “எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.காம், எம்.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவி யர் தங்களுடைய மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டி யல், வகுப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், அசல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும். மேற்கண்ட பாடங்களில் சேரும் மாணவர்களுக்கு 13.9.2023 முதல் வகுப்புகள் நடைபெ றும்” என்றார்.
மாற்றுத்திறனாளிகள் சங்க புதிய கிளை அமைப்பு
கும்பகோணம் செப்.8 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் தேனாம் படுகை கிராமத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. கூட்டத்திற்கு பட்டீஸ்வரம் விஜயலஷ்மி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பழ.அன்புமணி பேசி னார். மாவட்ட இணைச் செயலாளர் சரவணன் மற்றும் தேனாம்படுகை ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.எஸ்.முத்துக் குமார் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார். சங்கத்தின் தேனாம்படுகை புதிய கிளையின் தலைவராக ஆர்.பன்னீர், செயலாளராக பி.தீபா, பொருளாளராக எஸ்.சாந்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நீலக்குடி கிராம நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கல்
திருவாரூர், செப்.8 - உலக எழுத்தறிவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சார்பாக நீலக்குடி கிராம நூலகத் துக்கு 150 புத்தகம், மேசை மற்றும் நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் 150 புத்தகங்களை வழங்கி, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக எண்ணிக் கையில் நூலகத்தை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். மத்திய சோழா நூலகம் இதற்கான ஏற்பாடு களை செய்திருந்தது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இரா.திருமுருகன், நூலகர் பரமேஸ்வரன், தேர்வு கட்டுப்பாட்டாளர் நாகராஜன் மற்றும் நீலக்குடி கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கத் தலைவர் குணசீலன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜமூர்த்தி, கிராம நூலகத்தின் நூலகர் காளிமுத்து மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
வழிகாட்டல் பயிலரங்கம்
பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆல வயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றம் மற்றும் உயர் கல்வி வழிகாட்டல் பயிலரங்கம் நடந்தது. பள்ளித் தலைமையாசிரியர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஊராட்சித்தலைவர் சந்திரா சக்திவேல், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி சத்யகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மரம் அறக்கட்டளை சிவக்குமார், கண்டியாநத்தம் முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ராஜ்குமார் சிறப்புரையாற்றினார்.
சிபிஎம் காத்திருப்புப் போராட்டம் வெற்றி! குளத்தை தூர்வாரித் தர அலுவலர்கள் உறுதி
தஞ்சாவூர், செப்.8- ஆதிதிராவிடர் கீழத்தெரு குளம் தூர்வாரித் தரப்படும் என அதிகாரிகள் உறுதி யளித்தனர். கடந்த 2021 - 22 ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே ஆற்காடு ஆதி திராவிடர் கீழத்தெரு குளத்தை தூர்வாரி, சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், உயர் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், பேச்சுவார்த்தை நடத்தியும் பூதலூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் சார்பில் வெள்ளிக்கிழமை பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிளைச் செயலாளர் சி.அறிவுறுவோன், ஆர்.ராமதாஸ் தலைமையில் காத்திருப்பு போ ராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்டக்குழு உறுப்பினர் கே.காந்தி, ஒன்றியச் செயலாளர்கள் எம்.ரமேஷ் (பூதலூர் வடக்கு), சி.பாஸ்கர் (பூதலூர் தெற்கு) மற்றும் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலா ளர்கள், கட்சியினர், பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, பொற்கொடி ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னரிடம், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி னர். அதில், “செப்.13 அன்று, குளம் ஆக்கிர மிப்பை அகற்றி தூர்வாரித் தரப்படும்” என உறுதியளித்தனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி
திருவாரூர், செப்.8 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே தீபங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜசேகர் (37). தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநராக வேலை பார்த்து வரு கிறார். இவரது சகோதரர் கூலி தொழிலாளி முரளி தரன் (35). இருவரும் ஓட்டு வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்ற னர். மேலும் இடப் பற்றாக்குறை காரணமாக வீட்டின் முன்பாக மண்சுவர் கொண்ட கூரை வீடு ஒன்று அமைக் கப்பட்டுள்ளது. தற்போது அந்த கூரை வீட்டினை பழுது நீக்கம் செய்வதற்காக பணிகள் நடைபெறுகிற நிலை யில், அதில் மூங்கில் கொண்டு முட்டு கொடுத்துள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு ராஜசேகரன் மகன் கனிஷ் (8), முரளிதரன் மகள் அகஸ்ட்டியா (6) இரு வரும் வீட்டிற்குள் விளையாடி கொண்டிருந்த போது, எதிர்பாரா விதமாக மண் சுவர் இடிந்து குழந்தைகள் இருவர் மீதும் விழுந்துள்ளது. இதில் இருவரும் காய மடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்பு லன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் கனிஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் காயமடைந்த அகஸ்ட்டியா மருத்துவமனையில் சிகிச் சையில் உள்ளார். இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப் பதிந்து கனிஷ் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
வேளாண் அலுவலர்களுக்கு பயிற்சி
பாபநாசம், செப்.8 - வேளாண்மை விரி வாக்க அலுவலர்களுக்கு நெற்பயிரில் பச்சை பாசி கட்டுப்பாடு தொடர்பான பயிற்சி அட்மா திட்டத் தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாரத்தில் நடந்தது. பாபநாசம் வட்டார வேளாண் அலுவலர் நட ராஜன் தலைமை வகித் தார். அட்மா திட்ட தொழிற் நுட்ப மேலாளர் சிவ ரஞ்சனி வரவேற்றார். பயிற்சியில் நீடாமங்க லம் வேளாண் அறிவியல் நிலைய உழவியல் துறை உதவிப் பேராசிரியர் கருணாகரன், நெல் சாகு படி வயலில் காணப்படும் பச்சை பாசி எவ்வாறு உருவாகிறது, அதனால் ஏற்படும் மகசூல் இழப்பு, அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து கூறி னார். இதில் பாபநாசம் வட்டார வேளாண் அலுவ லர், துணை வேளாண் அலுவலர், உதவி விதை அலுவலர், உதவி வேளாண் அலுவலர்கள், உதவி தோட்டக் கலை அலுவலர்கள், அட்மா திட்டப் பணியாளர்கள், பயிர் அறுவடை பரி சோதனை பணியா ளர்கள் பயிற்சி பெற்றனர். பாபநாசம் வட்டார துணை வேளாண் அலுவ லர் எபிநேசன் நன்றி கூறி னார்.
ஆசிரியர்களுக்கு விருது வழங்கல்
பொன்னமராவதி, செப்.8 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதியில் ஆதிகாலத்து அலங்கார மாளிகை சார்பில் 12 ஆம் ஆண்டு ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பொன்னமராவதி வர்த்த கர் கழக மஹாலில் நடை பெற்ற விழாவிற்கு ஆதி காலத்து அலங்கார மாளிகை இயக்குநர் ஜெயபால் தலைமை வகித் தார். ஆதிகாலத்து அலங் கார மாளிகை இணை நிர்வாக இயக்குநர் அருண் வரவேற்றார். சாகித்ய அகாடமி முன் னாள் உறுப்பினரும் கவிஞருமான தங்கம் மூர்த்தி வாழ்த்துரை ஆற்றினார். ஆசிரியர்களுக்கு “பெருமை விருதுகளை” மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வழங்கி பாராட்டி னார்.