districts

திருச்சி முக்கிய செய்திகள்

பள்ளி நூற்றாண்டு விழா

பாபநாசம், ஜன.31 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடந்தது.  கபிஸ்தலம் ஜேக் அண்ட் ஜில் பள்ளி நிர்வாகி மைக்கேல், வட்டார வளமைய மேற் பார்வையாளர் (ஓய்வு) செல்வராஜ், பாபநாசம் லயன்ஸ் கிளப் வட்டாரத் தலைவர் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். பள்ளியைச் சேர்ந்த  அனைத்து மாணவர் களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி எஸ்.எம்.சி. தலைவி புவனேஸ்வரி, துணைத் தலைவி கேத்ரின் விமலா உட்பட  மாணவர்கள், பெற்றோர் கள் பங்கேற்றனர். ஆசிரியை விமலா நன்றி  கூறினார்.

பேரூராட்சி மன்றக் கூட்டம்

பாபநாசம், ஜன.31 -  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி மன்றக் கூட்டம் நடந்தது.  கூட்டத்திற்கு பேரூ ராட்சித் தலைவி பூங்குழலி  தலைமை வகித்தார். துணைத் தலைவர் பூபதி ராஜா, செயல் அலுவலர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாபநாசம் பேரூ ராட்சியில் சாலைகள், வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது என  தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதில் பேரூராட்சி  கவுன்சிலர்கள், துப்புரவு  ஆய்வாளர் பரமசிவம் உட்பட பலர் பங்கேற்ற னர். இளநிலை உதவியா ளர் ஹரிதாஸ் நன்றி கூறி னார்.

அறந்தாங்கி அரசுக் கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டம்

அறந்தாங்கி, ஜன.31 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை அடுத்த பெரு நாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரி வுரையாளர்கள் கல்லூரி  முன்பு வாயில் முழக்க  போராட்டம் நடத்தினர்.  கல்லூரி பேராசிரியர் முனைவர் கணேஷ் குமார் தலைமையில், “உயர்நீதிமன்ற உத்தர வின்படி ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண் டும். பணி பாதுகாப்பு வேண்டும் பணி நிரந்தரம் வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

நெல் மறைமுக ஏலம்

பாபநாசம், ஜன.31 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்கு முறை  விற்பனைக் கூடத்தில் பாரம்பரிய நெல் மறை முக ஏலம் இ-நாம் முறை யில் நடந்தது. மறைமுக ஏலத்தில் கருப்பு கவுனி  அதிகபட்சம் கிலோ ஒன்று ரூ.65-க்கும், குறைந்தபட்சம் கிலோ ஒன்று ரூ.61-க்கும், மாப் பிள்ளை சம்பா கிலோ ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.38-க்கும், இரத்தசாலி நெல் அதிகபட்சம் ரூ.32-க்கும் விற்பனையானது. இதில் வணிகர்கள் 6 பேர், விவசாயிகள் 3 பேர்  பங்கேற்றனர்.

சிறுவன் உயிரைக் காப்பாற்றிய மருத்துவருக்கு பாராட்டு விழா

பொன்னமராவதி, ஜன.31 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே  மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ஆபத்தான நிலையில் சேர்க்கப் பட்ட சிறுவனை காப்பாற்றிய, துர்கா மருத்துவமனை தலைமை மருத்துவர் அழகேசனுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.  சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அன்னகாமு என்ற 17 வயது சிறுவனை எதிர்பா ராத விதமாக மாடு முட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே  சிறுவனின் முழு குடலும் சரிந்து விழுந்தது. சிறுவனை ஆம்பு லன்ஸ் மூலம் பொன்னமராவதி துர்கா மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தலைமை மருத்து வர் அழகேசன் பரிசோதனை செய்த போது, அந்த சிறு வனுக்கு இதய ரத்த குழாய் கிழிந்து அதிகளவில் ரத்தப்போக்கு  ஏற்பட்டதுடன், நுரையீரலிலும் காயம்பட்டது. இதனால்,  மூச்சுத் திணறலுடன் ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன் காப்பாற்றப்பட்டு முழுவதுமாக குணமடைந்தார். இந்நிலையில், சிறுவனுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அமலா அன்னை மேல்நிலைப் பள்ளி தாளாளர் மரிய புஷ்பம்,  துணை முதல்வர் பிரின்ஸ் என்ற இளவரசன், சிறுவன் அன்னகாமு மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

டிரோன்கள் பறக்க தடை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை: பாரத சாரண-சாரணியர் வைர விழாவில் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி, ஜன.31 - பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (ஜம்போரி) மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற் றாண்டு நிறைவு பெருந்திரளணி விழாவை திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜன.28 அன்று, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பிப்.3 அன்று வரை இந்நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரண,  சாரணியர்கள் பங்கேற்று தங்கள், கலாச்சா ரம் குறித்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகின்றனர். இதன் நிறைவு விழா,  பிப்.2 அன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5  மணி அளவில் நடைபெறுகிறது.  இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  உரையாற்றுகிறார். விழாவில் அமைச்சர்கள்  கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி உட்பட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர் கள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை யொட்டி, வெள்ளியன்று மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை மேற் கொண்டனர். முதல்வரின் பாதுகாப்பு படை அதிகாரிகள் சனிக்கிழமை திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்த உள்ளனர். மேலும் டிரோன்கள் பறக்க தடை தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே பிப்.2 அன்று காலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாரண-சாரணியர் இயக்க வைர விழா பெருந்திரளணியில் பங்கேற்கிறார். ஆளுநர் மற்றும் முதல்வர் வருகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

அறந்தாங்கி, ஜன.31 - புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  வழிகாட்டுதல்படி, அறந்தாங்கி வட்டார வள மையத்திற்குட் பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு  முகாம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீதேவி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை)  ஜெயந்தி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர்  சேகர் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட கல்வி ஆய்வாளர்  இளையராஜா முகாமிற்கான குறிப்புரை வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஒருங்கிணைப் பாளர் பசுபதி அனைத்து நிகழ்வுகளையும் பார்வையிட்டார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொழிற்சார் பயிற்றுநர் ஜெகன் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை கள் குறித்து பேசினார்.  முகாமில் 131 மாணவர்கள் கலந்து கொண்டனர். 18 மாண வர்களுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் 50 மாணவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவி  உபகரணம் வழங்கப்பட்டது. 5 மாணவர்கள் அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டனர்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி  ஜகபர்அலி உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே

புதுக்கோட்டை, ஜன.31 - திருமயம் அருகே லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர்அலியின் உடல், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி, வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு அரசு மருத்துவக் குழுவினரால் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜகபர்அலி. இவர் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து குரல்  கொடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜன.17 அன்று  லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், குவாரி உரி மையாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவரது உடற்கூறாய்வு முறையாக நடை பெற்றதா என சந்தேகம் இருப்பதாக அவரது மனைவியும் புகார்தாரருமான மரியம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த விசாரணை முடிவில், புதைக்கப்பட்ட ஜகபர்அலியின் உடலைத்  தோண்டி எடுத்து, அரசு மருத்துவக் குழுவினரைக் கொண்டு  எக்ஸ்ரே செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் கடந்த வியா ழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து வெங்களூர் கோணாப்பட்டு சாலை யிலுள்ள இஸ்லாமியர்கள் கபர்ஸ்தானில் அடக்கம் செய்யப் பட்ட ஜகபர்அலியின் உடலைத் தோண்டி எடுப்பதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்ற  உத்தரவின்படி, வட்டாட்சியர் ராமசாமி, சிபிசிஐடி ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் உடலைத் தோண்டி எடுத்து எக்ஸ்ரே செய்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் பணிகள் நடை பெற்றன. மருத்துவர்கள் மதன்ராஜ், நெடுங்கிள்ளி, எக்ஸ்ரே  தொழில்நுட்பப் பணியாளர் சுரேஷ் ஆகியோர் முழு கவச  உடை அணிந்து இதனை மேற்கொண்டனர். ஜகபர்அலியின்  உடல் எக்ஸ்-ரே படம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் எனத்  தெரிகிறது. நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த ஆய்வை  படம், வீடியோ எடுக்க முடியாதபடி, கபர்ஸ்தான் உள்ள இடத்தி லிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு யாரும் அனு மதிக்கப்படவில்லை. காவல்துறையினரின் புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர் மட்டும் அனுமதிக்கப்பட்டு நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.

கீற்றுக் கொட்டகைகள் எரிந்து 6 ஆடுகள், 15 கோழிகள் கருகிய துயரம்! 

புதுக்கோட்டை, ஜன.31 - குளமங்கலம் கிராமத்தில் 6 ஆடுகள், 15 கோழிகள் தீயில்  கருகிய துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வடக்கு கிரா மத்தைச் சேர்ந்தவர் விவசாயி தங்கேஷ். இவர், அதே ஊரில்  ஒதுக்குப்புறமாக உள்ள தனது தோட்டத்தில் ஆடு, மாடுகள்,  கோழிகள் வளர்த்து வருகிறார். இரவில் ஆடுகளை ஒரு கீற்றுக்  கொட்டகையில் பாதுகாப்பாக கட்டி வைத்திருப்பது வழக்கம். மேலும், அதன் அருகே மற்றொரு கொட்டகையில் தங்கேஷின் சகோதரி அவரது மகனுடன் வசித்து, ஆடு-மாடுகளுக்கு பாதுகாப்பாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை கூலி வேலைக்கு வெளியூர் செல்வதற்காக தங்கேஷின் சகோதரி  உணவு சமைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை அந்த கொட்டகை களில் இருந்து புகை வருவதைப் பார்த்த அக்கம் பக்கத்தி னர் ஓடிச் சென்று பார்த்த போது கீற்றுக் கொட்டகைகள் முழு மையாக எரிந்து சாம்பலாக கிடந்துள்ளது. ஒரு பசு மாட்டின் மீது  தீப் பற்றி எரிவதைப் பார்த்தவர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளனர். அதற்குள் பசுமாட்டிற்கு தீக் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த பிறகு, அருகில் சென்று பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 6 ஆடுகள், 15 கோழிகள் ஆங்காங்கே எரிந்து கரிக்கட்டை யாக கிடந்தன. பல ஆவணங்களும் எரிந்து சாம்பலாகிக் கிடந்தன. தகவலறிந்து வந்த கீரமங்கலம் போலீசார், குள மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து தீ எப்படி பற்றியது என்று விசாரணை  நடத்தி வருகின்றனர். மேலும், கால்நடை துறையினர் தீயில்  பலியான ஆடுகள், கோழிகளை உடற்கூராய்வு செய்தனர்.

மருதுபாண்டியர் கல்லூரியில் திறன் சார் போட்டிகள்

தஞ்சாவூர், ஜன.31 - தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மைத் துறை மற்றும் இளங்கலை பாதுகாப்பு மற்றும் யுக்திகள் துறை சார்பாக, மாணவர்கள் தங்கள் திறனை வெளிக்காட்டும் போட்டிகள் டிரிக்ஸ்- 2025  வியாழக்கிழமை நடைபெற்றது.  இவ்விழாவில், கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தார், சிறப்பு விருந்தின ராக திரைப்பட நடிகர் துரை.சுதாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.   மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா.விஜயா, கல்வி யியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர்  ரா.தங்கராஜ், வணிக மேலாண்மை துறைத் தலைவர்  வித்யா ஆகியோர், வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினர்.  முன்னதாக முதுநிலை மேலாண்மைத் துறை மாணவர் சந்தோஷ்குமார், வரவேற்றார். இளங்கலை பாதுகாப்பு மற்றும் யுக்திகள் துறை மாணவி ரேணுகாதேவி நன்றி கூறினார். விழாவில் 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்க இலக்கிய விருதுகள் பெற அழைப்பு

கள் பெற அழைப்பு  புதுக்கோட்டை, ஜன.31 - புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் பெற படைப்பாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தி ருப்பதாவது: புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் 2ஆம் ஆண்டு  சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் -2025 வழங்கப்பட வுள்ளன. இந்த விருதுகளுக்கு மாநிலம் முழுவதும் உள்ள  இலக்கியப் படைப்பாளிகள் தங்களின் நூல்களை அனுப்ப லாம். மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ கவிதை, சிறுகதை, நாவல், சிறார் இலக்கியம், கட்டுரை (சமூகம், வரலாறு), கட்டுரை (கலை, இலக்கியம், தன்னம்பிக்கை), மொழிபெயர்ப்பு நூல் (சிறுகதை, நாவல்) மற்றும் சிறந்த சிற்றிதழ் ஆகிய 10 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட வுள்ளன. தலா ரூ. 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூபாய் ஒரு லட்சம்  ரொக்கப் பரிசுத் தொகையுடன் விருது வழங்கப்படும். நூல்கள் அனைத்தும் 2024ஆம் ஆண்டில் வெளிவந்த, முதல்  பதிப்பாக இருக்க வேண்டும். 3 பிரதிகள் அனுப்பி வைக்க  வேண்டும். நூல்களை அனுப்ப கடைசித் தேதி 2025 ஏப்ரல் 5. ஏப்.20 அன்று விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்ப டும். ஏப்.30 அன்று புதுக்கோட்டையில் விருது வழங்கும் விழா  நடைபெறும். அனுப்ப வேண்டிய முகவரி - சீனு சின்னப்பா இலக்கிய  விருதுகள்-2025, ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை- 622002. மேலும் விவரங்களுக்கு - 94431 26025 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வளாக நேர்காணல்  கும்பகோணம் அரசினர் கல்லூரி மாணவியர் 123 பேருக்கு பணிவாய்ப்பு

கும்பகோணம், ஜன.31- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் மையத் தின் சார்பில் மாணவியருக்கு மட்டும் நடைபெற்ற வளாக நேர்காணலில் 123 பேர் பணி வாய்ப்பு ஆணை பெற்றனர்.  புரூடுள் எச்.ஆர். நிறுவனத்தின் மூலம் பாக்ஸ்கான் நிறு வனத்திற்கு (ஐபோன்) தொழில்நுட்பப் பணிக்கு நேர்காணல் நடைபெற்றது. இந்த வளாக நேர்காணலில் கலந்துகொண்ட 300 மாணவியர்களில், 123 மாணவியர் பணி ஆணை பெற்றனர்.  புரூடுள் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் சகாய ராஜ், ராஜசேகர் ஆகியோர், மாணவியரிடம் அலுவல கத்தின் விதிமுறைகள் குறித்து விளக்கினர்.  வளாக நேர்காணலுக்கான ஏற்பாட்டினைத் தமிழ்த்  துறைத்தலைவரும் கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலரு மான ரமேஷ் சாமியப்பா செய்திருந்தார். பணி வாய்ப்புப் பெற்றவர்களுக்குக் கல்லூரி முதல்வர் அ.மாதவி பணி ஆணையை வழங்கி வாழ்த்தினார்.