கரூர், அக்.10 - சென்னை அயனாவரத் தில் சிஐடியு மாநிலக் குழு சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் நிர்மல் பள்ளிக்கு சிஐ டியு கரூர் மாவட்டக் குழு, சிஐடியு இணைப்பு சங்கங் கள், மத்திய தர தொழிற்சங்கங் கள் மற்றும் தோழர்கள் முயற்சியால் பொதுமக்கள், நண்பர்கள், உறவினர்களிட மிருந்து ரூ.3 லட்சம் நிதி திரட்டப்பட்டது. இந்த நிதி செவ்வாயன்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் அளிக்கப்பட்டது. கரூரில் நடைபெற்ற நிதியளிப்பு நிகழ்ச்சிக்கு சிஐடியு கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவா னந்தம் தலைமை வகித்தார். இந்த நிதி திரட்டலில் சங்கத்திற்கு அப்பாற்பட்டு, உறவினர்கள் மற்றும் நண்பர் கள் மூலமாக ரூ.1,03,050 நிதி திரட்டிய, கரூர் மாவட்ட அங்கன்வாடி சங்க மாவட்டச் செயலாளர் என்.சாந்தியை யும், ரூ.50 ஆயிரம் நிதி திரட்டிய தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநிலச் செயலாளர் த.சகிலாவையும், உண்டிய லில் தான் சேமித்து வைத்துள்ள பணம் ரூ.20 ஆயிரத்தை நிதியுதவியாக வழங்கிய கரூர் மாநகராட்சி கவுன்சிலர் தண்டபாணியின் குழந்தைகள் பூமிதா, கார்த்திகேயன் ஆகியோ ருக்கு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் நன்றி தெரிவித்து, நினைவு கேடயம் வழங்கிப் பாராட்டி னார். வாலிபர் சங்க கரூர் மாவட்ட முன்னாள் தலைவர் மா.ஜோதிபாசு, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் எம்.சுப்பிரமணி யன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பொன். ஜெயராம், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஐ.ஜான்பாட்ஷா, எல்ஐசி சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.