அறந்தாங்கி, பிப்.7- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் வட்டாட்சியர் ஷேக் அப்துல்லா தலைமையில், கலைமகள் கலைக் குழுவினரால் மது அருந்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்பு ணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போதைப் பழக்கத்தி னால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆடல்-பாட லுடன் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். கோட்டக் கலால் அலுவலர் ராஜாராம் மோகன்ராவ், துணை வட்டாட்சியர் முத்துக்கனி, பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.