பேராவூரணி பேரூராட்சியி்ல் ஊழல் முறைகேடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை
தஞ்சாவூர், பிப்.14- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி தலைவராக இருப்பவர் சாந்தி. இவரது கணவர் சேகர், திமுக நகரச் செயலா ளராக உள்ளார். மாமனார் செல்வராஜ் திமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், சாந்தி சேகர், பேராவூரணி பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றது முதல், பல கோடி ரூபாய்க்கு, அப்போதைய பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் என்பவர் ஒத்துழைப்புடன் பேரூராட்சி நிர்வாகத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து பேராவூரணியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, சென்னை பேரூராட்சி இயக்குநர் அலுவலக உயர் அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து, ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இது தொடர்பாக அரசு நிர்வாகம் ஆய்வு செய்து 6 வார காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தர விட்டதாகக் கூறப்படுகிறது. 3 மாதங்களை கடந்த நிலையில், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதிமுக சார்பில் 5000 பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், பேராவூரணி பேரூராட்சியில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகளை திமுக அரசு மூடி மறைப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்நிலையில் பேராவூரணி பொன்காடு பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் என்பவர், கடந்த புதன்கிழமை மதுரை உயர்நீதி மன்றத்தில் ஊழல் முறைகேடு தொடர்பாக இதுவரை ஏன் நட வடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக ஏதேனும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேட்டு வழக்கறிஞர் மூலம் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதைத் தொடர்ந்து, பிப்.13 அன்று தஞ்சாவூரில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அன்பரசன் தலைமையில் வந்த மூன்று பேர் கொண்ட குழு, பொன்-காடு சென்று, வழக்கு தொடர்ந்த நீலகண்டனிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்தனர். சாலைப் பணிகள் நடைபெறாமலேயே பணிகள் முடிந்த தாக, பேரூராட்சி தலைவரின் கணவர் பணம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்த இடங்களிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. பேரூராட்சி அலு வலகத்தில் பேரூராட்சி தலைவரோ, செயல் அலுவலரோ ஆய்வின் போது இல்லை. அங்குள்ள அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர்.
அரசு சார்பில் ஏழு ஜோடிகளுக்கு திருமணம்
பெரம்பலூர், பிப்.14- பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 7 இணையர்களுக்கு வெள்ளியன்று தமிழ்நாடு அரசு சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன், இந்து சமய அறநிலையத் துறையின் மாவட்ட நியமனகுழுத் தலைவர் அ.கலியபெருமாள் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர். ஒரு இணையருக்கு 4 கிராம் தங்க தாலி உட்பட ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, பெரம்பலூர் உதவி ஆணையர் உமா, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, அறநிலையத்துறையினர், மணமக்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்
தஞ்சாவூர், பிப்.14- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற்று வரும் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாமை வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ஆய்வு செய்தார். சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உள்ள 80 வருவாய் கிராமங்களிலும் நில உடமை பதிவுகளை சரிபார்க்கும் முகாம் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம், மகளிர் திட்ட சமூக வள பயிற்றுநர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களை, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம் ) எஸ்.மாலதி ஆய்வு செய்தார். ஆய்வின்போது சேது பாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சாந்தி மற்றும் வேளாண் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்யாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு பிப்.28 க்குள் விண்ணப்பிக்கலாம்
திருச்சிராப்பள்ளி, பிப்.14- பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர்(பொறுப்பு) ஜெயபிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற தன்னாட்சி, தன்னாட்சி அல்லாத கல்லூரிகளிலும், தொலைக்கல்வி மையத்திலும் இளநிலை பட்டப்படிப்பில் 2019-20 ஆம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சேர்க்கை பெற்றும், முதுநிலை - பட்டப்படிப்பில் 2020-21 ஆம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சேர்க்கை பெற்றும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்திருந்த என் பிளஸ் 2 கால வரையறைக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்ய இயலாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடைபெற உள்ளது. இதில் எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் திட்ட கட்டுரை என நிலுவைத் தாள்கள் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வருகிற ஏப்ரல் பருவத்தில் மட்டும் சிறப்பு தேர்வு எழுதிக் கொள்ள பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கிறது. இத்தேர்வுகள் நடத்துவது பற்றி அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும், தொலைக்கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு விட்டது. நிலுவைத் தாள்களை வைத்திருக்கும் மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகளையோ அல்லது தொலைக்கல்வி மையத்தையோ அணுகி, தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் பிப்.28 ஆம் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் www.bdu.ac.in என்ற இணைய தளத்திலும், தொலைக்கல்வி மைய மாணவர்கள் www.bdu. ac.in/cde என்ற இணையதளத்திலும் சென்று தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தியாகி வள்ளியம்மை அரசுப் பள்ளியில் ரூ.4 லட்சத்தில் இரும்பு கூடாரம் அமைப்பு
மயிலாடுதுறை, பிப்.14- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் இரும்பு கூரையிலான கூடாரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளியில், மாணவர்கள் தேர்வுகள் எழுதுவதற்கும், அமர்ந்து உணவு உண்பதற்கும், பள்ளி விழாக்களை அமர்ந்து கண்டு களிப்பதற்கும் ஏற்ற வகையில் இரும்பு கூரையிலான மேற்கூரை கூடாரம் அமைக்கப்பட வேண்டிய தேவை இருந்தது. இந்நிலையில், நாகை இஜிஎஸ் பிள்ளை கல்வி குழுமம் சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் இரும்பு கூரை கூடாரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு கல்வி குழுமத்தைச் சார்ந்த தொழிலதிபர் தர்மராஜ் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.ரெங்கராஜ், கிராம பொதுநலச் சங்க முன்னாள் தலைவர் எஸ்.ஜெகதீசன், பள்ளி புரவலரும், தில்லையாடி அருணாசலக்கவிராயர் இயல் இசை நாடக மன்ற நிறுவனருமான என். வீராசாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ராமலிங்கம், கோவிந்தராஜ், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி புரவலர் என்.வீராசாமி 84 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகளும், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எழுது பொருட்களும் வழங்கப்பட்டன. இப்பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் என்.பிரபாகரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினர் கார்த்தி, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட மைய நூலகத்தில் நாளை சிறார்களுக்கான கதை எழுதும் பயிற்சி
திருச்சிராப்பள்ளி, பிப்.14- திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் மற்றும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர் சங்கம் இணைந்து பிப்.16 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட மைய நூலகத்தில் சிறார்களுக்கான கதை எழுதும் பயிற்சி, கதை சொல்லல் நிகழ்ச்சி, மொழிப்பயிற்சி மற்றும் ஓவியப் பயிற்சிகள் நடத்த உள்ளன. இந்த பயிற்சியில் 5 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறார்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ளும் சிறார்கள் குறிப்பேடு மற்றும் ஓவியம் வரைய தேவையான பொருட்களை எடுத்து வர வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 8825790004 என்ற (வாட்ஸ்அப்) எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை என திருச்சி மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.
விடுபட்ட விவசாயிகளின் பெயரையும் சேர்த்து பாசனதாரர் சங்க தேர்தலை நடத்த வேண்டும் ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை
தஞ்சாவூர், பிப்.14- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, ஆதனூர் ஏரி மற்றும் வேம்பன்குளம் ஏரிகளின் பாசனதாரர் சங்கத் தேர்தலை விடுபட்ட விவசாயிகளின் பெயர்களையும் சேர்த்த பிறகு நடத்த வேண்டும் என தஞ்சை ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பாசனதாரர் சங்க முன்னாள் தலைவர் வேத. குஞ்சருளன் விவசாயிகள் சார்பில், அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், “ஆதனூர் பெரிய ஏரி மற்றும் வேம்பன்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பிப்.7 ஆம் தேதி பெறப்படும் என கடந்த 6 ஆம் தேதி திடீரென ஆதனூர் கடைத் தெருவில் தேர்தல் அட்டவணை ஒட்டப்பட்டது. பிப்.19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்காளர் பட்டியலை பொதுப்பணித்துறையினர் வெளியிடாமல் விவசாயிகளிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். முதல் நாள் அறிவிப்பு வெளியிட்டு அடுத்த நாளே வேட்பு மனு தாக்கல் என அவசர அவசரமாக அறிவித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் விவசாயிகளின் பெயர்கள் முறையாக இடம்பெறவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள விவசாயிகள் மட்டுமே மனுத் தாக்கல் செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத விவசாயிகளின் பெயர்களையும் சேர்த்த பிறகு தேர்தலை நடத்தினால் மட்டுமே உண்மையான விவசாயிகள் பாசனதாரர் சங்கத் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
அதிகரிக்கும் நாய்கள் கூட்டம்: பொதுமக்கள் அவதி
பாபநாசம், பிப்.14- பாபநாசம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சாலைகளில் நாய்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பதுடன், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயப் படுகின்றனர். சாலைகளில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்களைத் துரத்துகின்றன. இதில், தோல் வியாதியுள்ள நாய்களும் வேறு சுற்றித் திரிகின்றன. இதனால் தெருக்களில் புதிதாக வருபவர்கள் நடந்து செல்ல அச்சப் படும் சூழல் உள்ளது. புதிதாக வருபவர்களால் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்துச் செல்லவே முடியாது. நாய் கடிக்கு ஊசி போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது. நாய்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருப்பதைப் பார்த்தால், பிற பகுதிகளிலிருந்து நாய்களை இங்கு கொண்டு வந்து விடுகிறார்களா தெரியவில்லை. நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.