districts

img

அண்ணாமலை பல்கலை.முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடினர்

சிதம்பரம், பிப். 29-  அண்ணாமலை பல்கலை கழகத்தில்  1970 முதல் 1974-ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர்.   இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில்  குடும்பத்தினருடன் இணைந்து  பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினர்.  இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் பங்கேற்று முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டார்.  இதில் பல்கலைக்கழக பதி வாளர்  சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண்புல தலைவர்  அங்கயற்கண்ணி மற்றும் 1974-ஆம் ஆண்டுகளில்  மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு முன்னாள் மாண வர்களை பாராட்டி மலரும் நினைவு களை பகிர்ந்து கொண்டனர்.  சங்கத்தின்  நிர்வாகிகள் அக்ரி கருணாநிதி, ஒருங்கிணைப்பாளர் கள் அக்ரி முத்துராமன் , அக்ரி சுவாமிநாதன், அக்ரி இராதா கிருஷ்ணன் , அக்ரி கருணாகரன் ஆகியோர் மாணவர்களை ஒருங்கி ணைத்து விழா ஏற்பாடுகளை செய்தனர். சங்கத்தின் சார்பில் ரூ 3 லட்சம் செலவில் உபகரணங் களை வாங்கித்தரவும் , அறை களை புதுப்பித்துத்தரவும் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து குடும்பத்துடன் அனை வரும் ஆட்டம் பாட்டத்துடன்  மகிழ்ந்தனர்.  நிறைவாக பொருளாளர் அக்ரி மெய்யப்பன் நன்றி கூறினார்.