தஞ்சாவூர், ஜூன் 14-
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்களுக்கு அண்ணல் அம் பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழாவை, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் செவ்வா யன்று துவக்கி வைத்தார்.
கூட்டத்திற்கு பின்னர் ஆட்சியர் கூறுகையில், ‘‘மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்க ளுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறி முக விழா புதனன்று நடைபெற்றது.
சமூக நீதியிலும் சமத்துவத்தி லும் பற்றுறுதி கொண்ட தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி., தொழில் முனைவோருக்கெனச் செயல் படுத்தும் தனிச்சிறப்புத் திட்டம்
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தனி நபர், அப்பிரிவினருக்கு உரிமை யான தனியுரிமை அலகுகள், பங்கு தாரர் கூட்டாண்மைகள், ஒரு நபர் கம்பனி, பிரைவேட் லிமிடெட் கம் பெனிகள் பயன்பெறலாம். புதிய தொழில் திட்டங்கள் மட்டுமன்றி இயங்கிக் கொண்டிருக்கின்ற அல குகளின் விரிவாக்க, பல்துறை யாக்க, நவீனமாக்க மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு முன்னெ டுப்புகள் மேற்கொள்ளலாம்.
கல்வித் தகுதி தேவை யில்லை, வயது 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான வரம்பில்லை.
திட்டத்தொகையில் 65 விழுக் காடு வங்கிக் கடன் 35 விழுக்காடு, அரசு மானியம் வங்கிக் கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழு வதும் 6 விழுக்காடு வட்டி மானியம் நேரடி வேளாண்மை தவிர்த்து அனைத்து உற்பத்தி, வணிகம் மற்றும் சேவைசார் தொழில் திட் டங்கள் உணவுப் பதப்படுத்துதல், ஆயத்த ஆடைகள் தைத்தல், தென்னை நார்ப் பொருட்கள் உற் பத்தி, ஹாலோபிளாக், சாலிட் பிளாக், பல்பொருள் அங்காடி, வணிகப் பொருட்கள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, ஐ.டி. ஹார்ட்வேர், சாஃப்ட்வேர், பிபிஒ, ஆட்டோ மொபைல் சர்வீசிங், அழகு நிலையம், உடற்பயிற்சிக்கூடம், கழிவு மேலாண்மை, பயணியர் மற்றும் சரக்குப் போக்குவரத்து, ஜேசிபி, ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி உள்ளிட்டவை, இத்திட்டம் மாவட்டத் தொழில் மையத்தின் வாயிலாகச் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப் பிக்க வேண்டிய இணையதள முகவரி www.msmeonline.tn.gov.in/aabcs ஆகும். இத்திட்டம் குறித்த மேலதிக விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்டத் தொழில் மையம், உழ வர் சந்தை அருகில், நாஞ்சிக் கோட்டை ரோடு, தஞ்சாவூர் அலு வலகத்தினை நேரடியாகவோ, 04362-255318,257345 ஆகிய தொலைபேசிகள் மூலமாகவோ அணுகலாம்’’ எனக் கூறினார்.