தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா அரங்கில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், மொத்தம் ரூ.13,57,690 மதிப்பீட்டில் 262 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.