districts

img

விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், பிப்.28 - விவசாயிகளுக்கு அளித்த  வாக்குறுதிகளை நிறை வேற்ற வலியுறுத்தி, தில்லி யில் விவசாயிகள் போராட் டம் நடத்தினர். இப்போராட் டத்தை ஒடுக்கும் வகையில், துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி விவசாயிகள் பலியாகக் காரணமான ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கரூர் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு எல்பிஎப் சங்க மாவட்டத் தலைவர் வி.ஆர். அண்ணாவேலு தலைமை வகித்தார். எல்பிஎப் மாவட் டச் செயலாளர் பழ.அப்பா சாமி, சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.முருகேசன், எஸ்கேஎம் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ஜி.ராஜ சேகர், ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் ஆனந்தராஜ், எம்.எல்.எப்  சங்க மாவட்டச் செயலாளர் குணாளன், எல்எல்எப் சங்க மாவட்ட அமைப்பாளர் சுடர் வளவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட னர்.