புதுக்கோட்டை ஆக.19:- புதுக்கோட்டை மாவட்டம் அரி மளத்தில் யூக்கலிப்டஸ் என்ற தைல மரக் காடுகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் அனை த்துக் கட்சியினர் பங்கேற்ற ஆர்ப் பாட்டம் திங்கள்கிழமை நடை பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அரி மளம், செங்கீரை பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீரா தாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் யூக்கலிப்டஸ் என்னும் தைலமரக் காடுகளை அப்புறப் படுத்த வேண்டும். தோட்டக்கலைத் துறையின் மூலமாக பண்ணை களை உருவாக்கி அப்பகுதி இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நாட்டு மரங்களை நட்டு வளர்த்து சுற்றுச் சூழலுக்கும், பல்லுயிர் பெருக்கத் திற்கும் வழிவகை செய்ய வேண்டும். நிலமற்ற விவசாயிகளுக்கு நிலங்களைப் பிரித்து குத்தகைக்கு விட வேண்டும். நீதிமன்ற உத்தர வைக் காரணம்காட்டி தைல மரங்கள் நடுவதைக் கைவிட வேண்டும். நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தைலமரக் காடுகளை அழிக்கும் போராட்டம் தொடரும் அரிமளம் எட்டாம் மண்டகப்படி யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு விவசாயி ஏ.சாத்தப்பன் தலைமை வகித்தார். சிபிஎம் ஒள்றியச் செயலளார் ஆர்.வி. ராமையா நிகழ்வை ஒருங்கி ணைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர் வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம். சின்னதுரை கண்டன உரையாற்றி னார். அவர் பேசும்போது கூறிய தாவது: திருமண விழாவுக்கு வெடி வெடித்து குதிரை, யானை ஊர்வ லத்துக்கு ஆதரவு அளிக்கும் காவல் துறை, ஜனநாயக முறை யில் ஊர்வலம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். ஊர்வலத்துக்கு தடை விதித்து இருக்கலாம்.. கோரிக்கைக்காக அனைவரும் ஓரணியில் திரண்டிருப்பதை யாராலும் தடுக்க முடியாது. இயல்பாகவே புதுக்கோட்டை வறட்சி பாதித்த மாவட்டமாக ஆண்டுதோறும் இருந்து வரு கிறது. வறட்சியை மேலும் அதிக ரிக்கும் வேலையை தைலமரக் காடுகள் செய்து வருகின்றன. இந்தத் தைலமரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தையே உரிஞ்சு வாதாகக் கூறப்படுகிறது. பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி தைல மரக் கன்றுகளை நடுவதை வனத் துறையினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். நிலங்களில் பல்லுயிர் உயிரி னங்கள் வாழக்கூடிய காடுகளை உருவாக்க வேண்டும். கடந்த ஆண்டு டிஎன்பிஎல் நிறுவனத்து க்கு ரூ.600 கோடி லாபம் கிடைத் துள்ளது. உற்பத்தியைக் கொடுத்த இம்மாவட்ட மக்களுக்கு எதாவது அரசு கொடுத்துள்ளதா? இதுகுறித்து சட்டமன்றத்தில் நான் குரல் எழுப்பினேன். புதி தாக தைலமரக்கன்றுகள் நடப் படாது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வனத்துறையினர் இதற்கு நேர்மாறாக செயல்படுகின்றனர். வனத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்க விரும்புகிறோம். இந்தப் போராட்டம் இன்றோடு முடியப் போவதில்லை. விரைவில் மாவட்ட அளவிலான போராட்டமாக இது வெடிக்கும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் விதொச மாநி லச் செயலாளர் எஸ்.சங்கர், இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலை வர் ஜி.எஸ்.தனபதி, சிஐடியு மாநி லச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், விதொச மாவட்டச் செயலாளர் டி.சலோமி. மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.ஜனார்;த்தனன், ஜனநாயக மாதர்சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசிலா மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் மஞ்சுநாதன், ஆர்.கணேசன், பழ.குமரேசன், பி.ஆர்.கணேசன், பாலகுருநாதன், யுவ ராஜ் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஜி.நாகராஜன், சு.மதியழகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.அடைக்கப்பன், ஏ.மணி, வி.மாணிக்கம், டி.சக்திவேல், ஆர்.செல்லையா, என்.பழனியப்பன், ஜி.தமிழ்ச்செல்வன், எம்.அடைக்கலமேரி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.