அறந்தாங்கி, அக்.12 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை ஊராட்சிக்குட் பட்ட வைரிவயல் கிராமத்தில் 120 ஏக்கர் பரப்ப ளவில் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக அறந் தாங்கி நகர்ப்பகுதியில் இருக்கக் கூடிய சாக்கடை கழிவுநீர் வைரிவயல் ஏரியில் உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கண்மா யில் கலக்கிறது. இதனால், இந்த நீரை விவ சாய நிலங்களுக்கு பயன்படுத்த முடியாமல் உள்ளது. மேலும், இந்த ஏரி நீரை பயன் படுத்தும் விவசாயிகளுக்கு நோய்த் தொற்று மற்றும் தோல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து வைரிவயல் கிராம மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கு மனு அளித்தும், வட்டாட்சியர் தலைமையில் இரண்டு முறை சமாதானக் கூட்டம் நடத்தப் பட்டும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், வைரிவயல் கிராம மக்கள் புதனன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால், போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.