districts

img

அரியலூரில் கலைஞர் அறிவாலயம் கட்ட நடவடிக்கை

அரியலூர், ஆக.26 - அரியலூரில் விரைவில் கலைஞர் அறிவா லயம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாக போக்குவரத்துத் துறை அமைச்சரும், அக்கட்சியின் மாவட்டச் செயலருமான சா.சி.சிவசங்கர் தெரிவித்தார். அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற அக்கட்சி பொது உறுப்பினர்கள் கூட்டத் தில் அவர் மேலும் பேசியதாவது:  முத்தமிழறிஞர் கருணாநிதிக்கு நாண யம் வெளியிட்ட ஒன்றிய அரசுக்கு நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. மற்ற மாநி லங்களில் இன்று வரை மின்சாரம் வசதி இல்லாமல் 40 சதவீத குடும்பங்கள் உள்ளன. இதேபோல் போக்குவரத்து உள்ளிட்ட அடிப் படை வசதிகளும் இல்லாமல் உள்ளன.  ஆனால் தமிழ கத்தில்தான் அனைத்து அடிப்படை வசதி களும் உள்ளன. இதற்கு காரணமானவர்  மறைந்த முன்னாள் முதல்வர் கருணா நிதி. சாதி, சமயம் என அனைத்து வேறுபாடு களையும் கடந்து, சமூக நீதி பார்வையில் தமிழகம் வளர்ச்சிப் பெற்றுள்ளது. அரிய லூரில் முழு உருவ கருணாநிதி சிலை  வைப்பதற்கும், அறிவாலயம் கட்டுவ தற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது என்று அமைச்சர் பேசினார். கூட்டத்துக்கு, அக்கட்சியின் சட்ட திட்ட திருத்தக் குழு இணைச் செயலர் சுபா.சந்திர சேகர் தலைமை வகித்தார்.