districts

img

திருவையாறு ஒன்றியச் செயலாளராக ஏ.ராஜா தேர்வு

தஞ்சாவூர், அக்.14 -  திருவையாறு ஒன்றியச் செயலாளராக ஏ.ராஜா தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டம் திருவையாறு ஒன்றிய 15 ஆவது மாநாடு கண்டியூர் ராஜா திருமண மஹாலில் நடைபெற்றது. மூத்த தோழர் வி.நீலமே கம் மாநாட்டுக் கொடி யேற்றினார்.  மாநாட்டுக்கு எம்.பழ னிஅய்யா, கே.வரதராஜன், பி.சுமிதா ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றி யக்குழு உறுப்பினர் எம்.ராம் வரவேற்றுப் பேசி னார். மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் பி.செந்தில் குமார் துவக்க உரை யாற்றினார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் கே.அருளரசன் வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி நிறைவுரை யாற்றினார்.  இதில், 11 பேர் கொண்ட  புதிய ஒன்றியக் குழு வும், புதிய ஒன்றியச் செயலா ளராக ஏ.ராஜாவும் தேர்வு செய்யப்பட்டனர்.  வீடு இல்லாதவர் களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். பழைய தொ குப்பு வீடுகளை பழுது பார்த்து தர வேண்டும். திரு வையாறு பகுதியில் விவசா யம் சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும். பூத ராயநல்லூர் ஏரியை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க  வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.