புதுக்கோட்டை ஜன.22- புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி அருகே கிணற் றில் விழுந்த சகோதரியைக் காப்பாற்ற முயன்ற இளை ஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி அருகே கட்ராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமன் மகள் சுந்தரி (21). இவர் ஞாயிற்றுக் கிழமை மாலை குடும்பத் தகராறில் மனமுடைந்து அப்பகுதியில் உள்ள கிணற் றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அவ ரது சித்தப்பா அர்ச்சுணன் மகன் முத்துக்காளை (எ) முத்துக்குமார் (29) தங்கை யைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். கிணற்றில் சுந்தரி தத்தளித்த நிலையில் அவரை மீட்பதற் காக கிணற்றில் குதித்த முத்துக்குமார் தண்ணீரில் மூழ்கியுள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர் கள் சுந்தரியை மீட்டுள்ளனர். நீரில் மூழ்கிய முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஆலங்குடி தீயணைப்பு நிலையத்தினர் முத்துக்குமா ரின் உடலை மீட்டு புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற் கூராய்வுக்குப் பிறகு முத்துக்குமாரின் உடல் கட்ராம்பட்டி இடுகாட்டில் எரியூட்டப்பட்டது. எம்.சின்னத்துரை எம்எல்ஏ அஞ்சலி மறைந்த முத்துக்குமா ரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சு.மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் எல்.வடிவேல், ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிவண் ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.