பெரம்பலூர், அக்.2 - பெரம்பலூர் அருகே சிறுவாச் சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யா லயா பப்ளிக் பள்ளி மாணவி ஒன்றிய அரசின் என்சிஇடி தேர்வில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் தரவரிசையில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பெரம்பலூரைச் சேர்ந்த சக்தி வேல் - ராஜேஸ்வரி தம்பதியின் மகள் மதுரா. இவர் சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியில் 2016 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பி யாட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, பள்ளியின் தாளாளர் டாக்டர் ஆ.ராம்குமார் உதவியுடன் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தார். இந்நிலையில், ஒன்றிய அரசின் இந்தி யன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்சிஇடி) 2023 ஆண்டு தேர்வினை எழுதிய மாணவி மதுரா, அதில் அதிக மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் தரவரிசை யில் இடம் பிடித்துள்ளார். இதனால் மாணவி மதுராவிற்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிறுவனமான ஐஐடி யில், ஐடிஇபி பாடத்தில் 4 ஆண்டுகள் கல்வி பயில இடம் கிடைத்துள்ளது. என்சிஇடி தேர்வில் சாதனை படைத்த மாணவி மதுராவை, ஆல்மைட்டி வித்யா லயா பப்ளிக் பள்ளி தாளாளர் டாக்டர் ஆ.ராம் குமார், அகாடமி இயக்குநர் கார்த்திக், பள்ளி முதல்வர் சாரதா ஆகியோர் வாழ்த்தினர்.