கடலூர் சிப்காட்டில் செயல்படும் டாக்ரோஸ் கெமிக்கல் இந்தியா நிறுவனத்தில் தொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவடைந்து 28 மாதங்களை கடந்தும் புதிய ஊதிய உயர்வு வழங்காமல் காலம் கடத்தி வரும் நிர்வாகத்தை கண்டித்து, ஜூலை 23 முதல் சிஐடியு, டிவிஎஸ் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தொழிற்சங்கங்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்க அவை வலியுறுத்தியுள்ளன.