திருவாரூர், நவ.19 - விவசாயிகளின் மக்கள் போராளி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான தோழர் கோ.வீரய்யன் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் நவ.18 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தியாகி சிவராமன் நினைவிடத்தில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் டி.சுப்பிர மணியன், ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல்மார்க்ஸ், முத்துப்பேட்டை ஒன்றி யச் செயலாளர் பழனிச்சாமி, நகர்மன்றத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், நகரக் குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். நாகப்பட்டினம் சிபிஎம் நாகை மாவட்டக் குழு அலுவலகத்தில் செவ்வஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. சுப்பிரமணியன், ப.சுபாஷ் சந்திர போஸ், நகரச் செயலாளர் க.வெங்கடே சன், மு.குருசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.