அறந்தாங்கி, நவ.14- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டம் புண்ணியவயல் வருவாய் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை யின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை, வனத்துறை, மருத்துவம் மற்றும் ஊராட்சி துறை, தோட்டக்கலை, மலை பயிர் கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 490 பயனாளிக ளுக்கு ரூ.5,96.61,415 மதிப்பீட்டியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி பேசினார். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் வட்டம் புண்ணியவயல் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டது. முகா மில் பல்வேறு துறைகளின் சார்பில், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டி ருந்தன. இக்கண்காட்சி யினை பொதுமக்கள் பார்வை யிட்டு அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், முகாமில் வனத் துறை சார்பில், தெற்கு புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கருப்பையா கடந்த 12.8.24 அன்று தன்னுடைய வளையில் சிக்கிய கடற்பசு வினை பத்திரமாக மீட்டு மீண்டும் கடலில் விட்டதற்காக, அவருக்கு இழப்பீடு தொகை மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார். முகாமில் மாவட்ட வரு வாய் அலுவலர் ராஜராஜன், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவகுமார், தனித்துறை ஆட்சியர் சோபா, ஆவுடையார் ஒன்றிய குழு தலைவர் உமாதேவி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கே.கே.சி ராமநாதன், வட்டாட் சியர் மார்ட்டின் லூதர்கிங், புண்ணியவயல் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சுரேஷ் மற்றும் உள்ளாட்சிப் பிரதி நிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.