தஞ்சாவூர், மார்ச் 11 - தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில், ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் நலிவடைந்தோர் மற்றும் விதவைகள், நிலமற்ற பெண்களுக்கு நாட்டுக் கோழி வழங்கும் நிகழ்ச்சி, ஐசிஐசிஐ அறக்கட்டளை கார்ப்பரேட் சமூகப் பொறுப் புத் திட்டம் மூலம் நடை பெற்றது. வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்கள், நிலமற்ற பெண்கள் மற்றும் விதவைகளின் வாழ்வாதார நலனுக்காக, ஒரத்தநாடு பகுதியில், 11 ஊராட்சியைச் சேர்ந்த 400 பயனா ளிகளுக்கு, தலா 10 நாட்டுக் கோழிகள் வீதம் மொத்தம் 4,000 நாட்டுக் கோழிகள் ரூ.8 லட்சம் மதிப்பில் வழங்கப் பட்டன. ஒக்கநாடு கீழையூரில் நடைபெற்ற, இந்நிகழ்வில் வளர்ச்சி அலுவலர் நவ ராஜா, ஐசிஐசிஐ பவுண்டே சன் திட்ட செயல்பாடுகள் பற்றி கூறினார். ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி மன்றத் தலைவர் என்.சுரேஷ்குமார் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வன்னிப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் தினகரன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார். கால்நடை பராமரிப்புத் துறை டாக்டர்.கணேச மூர்த்தி, கோழிகள் பரா மரிப்பு மற்றும் தீவனம், நோய் மேலாண்மை குறித்து விளக்கினார். ஐசிஐசிஐ பவுண்டேசன் களப்பணியா ளர் சதீஷ்குமார் நன்றி கூறி னார்.