தஞ்சாவூர், மே 12 - தஞ்சாவூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் 4,17,999 பேர் பயன்பெற்று வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறுகையில், “தமிழ்நாடு முதல மைச்சரின் மக்கள் நலன் காக்கும் மகத்தான திட்டங்களின் வரிசையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மற்ற மாநிலங்க ளுக்கு வழிகாட்டும் சிறப்பான திட்டமாகும். தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, மாதந் தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் இந்தத் திட்டத்தின் மூலம், நாளது வரையில் 1 கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைந் துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 4,17,999 குடும்பத் தலைவிகள் பயன்பெற்றுள்ளனர். இவ்வாறு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்றார். பயனாளிகள் நன்றி இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்ற பயனாளி களான அம்மாபேட்டையைச் சேர்ந்த மஞ்சுளா காசிநாதன், சக்கரசாமந்தம் காந்திமதி சைவ ராஜ், கல்விராயன்பேட்டை புவனபால் தெட்சி ணாமூர்த்தி, வண்ணாரப்பேட்டை ராம்பேகம் ஜெகபர்அலி ஆகியோர், “வீட்டு வேலை செய்தும் கூலி வேலை செய்தும் வருகிற எங்களைப் போன்றவர்களின் வாழ்வா தாரத்தை உயர்த்திட மாதம் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கிய தமிழ்நாடு முதல்வ ருக்கு நன்றி” என மகிழ்வுடன் தெரிவித்தனர். தொகுப்பு ரெ.மதியழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர்.