அரியலூர், ஆக.26 -
அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ் சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் மூலமாக நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இதில் விருத்தாசலம் – ஜெயங் கொண்டம் - மதனத்தூர் சாலை யில் சுமார் 20.80 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச் சாலை யாக மேம்படுத்தும் பணி, முதல மைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டு, சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தில் 2 சிறுபாலங் கள் திரும்பக் கட்டுதல், 2 சிறுபாலங் கள் அகலப்படுத்துதல், 22 புதிய கல் வெர்ட்கள், 7 கல்வெர்ட்களை அகலப் படுத்துதல் மற்றும் ஆண்டிமடம், கல்லாத்தூர் கூவத்தூர் (வடக்கு-தெற்கு) ஆகிய குடியிருப்பு பகுதி களில் சுமார் 10.83 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைத் தல் ஆகிய பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.