கோவை, மார்ச் 11- பொள்ளாச்சி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் தங்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவிற்குட் பட்ட கூளநாயக்கன்பட்டி கிராமத்தில், மார்க்சிஸ்ட் கட்சி யில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இக்கிராமத் ைச் சேர்ந்த வி.முத்துகுமார் தலைமை ஏற்றார். இதில், சிபிஎம் பொள்ளாச்சி தாலுகாக்குழு உறுப்பினர்கள் கே.மகாலிங்கம், பாலகுருசாமி ஆகியோர் பங்கேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம், வரலாறு ஆகியவைகள் குறித்து பேசினர். இதனைத்தொடர்ந்து, 5 பெண்கள் உட்பட 30 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங் களை இணைத்துக் கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சி யின் அமைப்புக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக வி. முத்துக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில், உடுமலைப்பேட்டையில் இருந்து குண்டல் பட்டி வரை செல்லும் 1ஆம் நம்பர் அரசு பேருந்தை பள்ளி மாணவ, மாணவர்களின் நலன் கருதி உடுக்கம்பாளை யம் வரை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.