தஞ்சாவூர், ஆக.6 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மருங்கப்பள்ளம் பல்நோக்கு சேவைக் கட்டடத்தில், மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார். குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், வாத்தலைக்காடு, நாடியம், வீரியங் கோட்டை, கெங்காதரபுரம், கரம்பக்காடு, செருபாலக் காடு ஊராட்சி மன்றத் தலைவர்கள், அரசுத்துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர். 8 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அளித்தனர். முகாமில், கொள்ளுக்காடு அம்மன் சுய உதவிக் குழுவுக்கு ரூ.20 லட்சம், அழகிய நாயகிபுரம் காளியம்மன் சுய உதவிக் குழுவிற்கு ரூ.10 லட்சம் வங்கி நேரடிக் கடனை சட்டப்பேரவை உறுப்பி னர் நா.அசோக்குமார் வழங்கினார்.