இளம்பெண் ஆணவக்கொலை தடயங்களை மறைத்த பெண்ணின் உறவினர் 3 பேர் கைது
தஞ்சாவூர், ஜன.12 - பட்டுக்கோட்டை அருகே பட்டிய லின இளைஞரை திருமணம் செய்த தால், இளம்பெண்ணை கொலை செய்த பெற்றோருக்கு உடந்தையாக தடயங் களை மறைக்க முயன்ற, பெண்ணின் உறவினர் மூன்று பேரை காவல்துறை யினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே, நெய்வவிடுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் ஐஸ்வர்யா (19). இவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர். அருகில் உள்ள கிராமமான பூவாளூரைச் சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன் (19) என்ற டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினி யரிங் படித்துள்ள இளைஞர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம் அரவப்பாளை யத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் இருவரும் பணியாற்றி னர். இருவரும் காதலித்து வந்த நிலை யில், டிச.31 அன்று நண்பர்கள் முன்னி லையில், திருமணம் செய்து வீரபாண்டி அருகே, வாடகை வீட்டில் தங்கினர். இதையறிந்த ஐஸ்வர்யாவின் தந்தை மற்றும் உறவினர்கள் சிலர், பல்லடம் காவல்துறை மூலம், ஐஸ்வர் யாவை கடந்த ஜன.2 அன்று வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் ஜன.3 அன்று ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் கொலை செய்து எரித்து விட்டதாக, நவீன் வாட்டாத்திக்கோட்டை காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையி னர் வழக்குப் பதிந்து ஐஸ்வர்யாவின் பெற்றோர் உட்பட அவரது உறவி னர்கள் என சுமார் 15-க்கும் மேற்பட்டோ ரிடம் விசாரணை நடத்தினர். விசார ணையில், ஐஸ்வர்யாவை அவரது தந்தை, தாய் உள்ளிட்டோர் அடித்து கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு, மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரிய வந்தது. மேலும் இறந்த ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் சிலர் எரித்து விட்டு தடயங்கள் இல்லா மல் செய்தனர். காவல்துறையினர் விசாரணையின் போது, ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் இதை ஒப்புக்கொண்டனர். மேலும், தட யங்களை மறைக்க உடந்தையாக இருந்த பெருமாளின் உறவினரான சின்னராசு (30), திருச்செல்வம் (39), முருகேசன் (34), ஆகிய மூவரையும் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்து, பட்டுக்கோட்டை குற்ற வியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, ஜன.24 ஆம் தேதி வரை சின்னராசு, திருச்செல்வம், முருகேசன் ஆகிய மூவரையும் சிறையில் அடைக்க உத்தர விட்டதின் பேரில், அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே ஐஸ்வர்யாவின் பெற் றோர் கடந்த ஜன.10 அன்று சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், பலரிடம் விசாரணை நடந்து வருகிறது.
உயர்கல்வி வழிகாட்டு களப் பயணம்
பாபநாசம், ஜன.12 - ‘நான் முதல்வன்’ உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், குந்தவை நாச்சியார் கலைக் கல் லூரிக்கு களப் பயண மாக அழைத்துச் செல்லப் பட்டனர். இதில் கல்லூரி முதல்வர், பேராசிரி யர்கள் உயர்கல்வி குறித் துப் பேசினர். இதில் 370 மாணவர்கள், ஆசிரி யர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டினை பாபநாசம் வட்டார வள மைய மேற்பார்வையா ளர் (பொ) முருகன் செய் திருந்தார்.
பழைய பொருட்களை எரிக்கக் கூடாது!
பாபநாசம், ஜன.12 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவி ஷங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “போகி தினத்தன்று பழை யப் பொருட்களை எரிப்ப தால், வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிக மாகி, புவி வெப்பமடை கிறது. இதனால் குழந் தைகள், பெரியவர் களுக்கு உடல் நலனில் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்த்திடும் பொருட்டு, பழையப் பொ ருட்கள், பிளாஸ்டிக் கழிவுகள், டயர், துணிகள் உள்ளிட்டவற்றை எரிப் பதை தவிர்த்து, பேரூ ராட்சிப் பகுதியில் அமைக் கப்பட்டுள்ள சேகரிப்பு மையங்களில் சேர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
விற்பனைக் கண்காட்சி
புதுக்கோட்டை, ஜன.12 - தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக் கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பி னர்களால் உற்பத்தி செய் யப்பட்ட பொருட்களின் விற்பனைக் கண்காட் சியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா வெள்ளிக் கிழமை துவக்கி வைத்து பார்வையிட்டார். புதுக்கோட்டை கலை ஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, கலைஞர் கரு ணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.சுகந்தி, உதவித் திட்ட அலுவ லர் ராஜா முகமது உள்ளிட் டோர் கலந்து கொண்ட னர்.
பொன்மலை ஜி கார்னர் அருகே ரயில்வே பாலத்தில் திடீர் விரிசல்: போக்குவரத்து மாற்றம்
திருச்சிராப்பள்ளி, ஜன.12 - திருச்சி பொன்மலை ஜி கார்னர் அருகே உள்ள ரயில்வே பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால், வியாழனன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சா லையில் பொன்மலை ஜி கார்னர் பகுதி யில் 2 ரயில்வே பாலங்கள் உள்ளன. இதில், இடதுபுறமுள்ள திருச்சி - சென்னை வழித்தட பாலத்தின் ஒரு பகுதியில் வியாழனன்று திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து வியாழனன்று மாலை நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதி காரிகள் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, டிவிஎஸ் டோல் கேட்டிலிருந்து செல்லும் சர்வீஸ் சாலையில் உள்ள மாநகராட்சி ஆடு வதைக்கூடம் அருகில் பாலத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பாலத்தின் தூண் சற்று கீழே இறங்கி யுள்ளது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக அப்பகுதியில், வியாழனன்று நள்ளிரவு முதல் பொன்மலை ஜி கார்னரிலிருந்து செந்தண்ணீர்புரம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வலதுபுற பாலம் மற்றும் சாலையை இருவழிப் பாதை யாக்கி போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டது. இதற்காக அச்சாலை முழுவ தும் நடுவில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டன. மேலும் மதுரை, திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் ஜி கார்னர் முன்பாக வலதுபுறம் பாலத் திற்கு ஏறிச் செல்லும் வகையில் அங்கி ருந்த சென்டர் மீடியன்களும், இவ்வாக னங்கள் செந்தண்ணீர்புரம் சென்று இடதுபுறம் சாலைக்கு திரும்புவ தற்காக அங்கிருந்த சென்டர் மீடி யன்களும் இடித்து அகற்றப்பட்டன. அதேபோன்று, சென்னையி லிருந்து திருச்சி, மதுரை வரும் வாக னங்கள் ஜி கார்னர் சர்வீஸ் ரோட்டில் வந்து, ரஞ்சிதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் திரும்பி பாலத்தில் ஏறும் வகையில் அங்கிருந்த தடுப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. மேலும், இப் போக்குவரத்து மாற்றம் வியாழனன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இப்பணிகள் முடிய பல நாட்கள் ஆகும் என நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.
ஜன.19இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டை, ஜன.12 - புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவி லான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.1.2024 (வெள்ளிக்கிழமை) அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவ னங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித் தகுதி யுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளை ஞர்கள், தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் தமிழ்நாடு தனி யார்துறை வேலை இணையமான www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள்
அரியலூர், ஜன.12- அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, பள்ளிக் கல்வித்துறை சார்பில் 6-12 ஆம் வகுப்பு மாணவர் களுக்கான கட்டுரை மற்றும் ஓவியம் விழிப்புணர்வுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. அரியலூர் வருவாய் வட்ட அளவில் நடைபெற்ற போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த. விஜயலட்சுமி தொடக்கி வைத்து பார்வையிட்டார். 62 பள்ளிகளில் இருந்து 218 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் ஒவ்வொரு பிரிவுகளிலும் தலா 15 பேருக்கு முதல் மற்றும் 2 ஆம், 3 ஆம் பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழ கன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவி யாளர் இராஜபிரியன் (மேல்நிலை), குணசேகரன் (இடை நிலை), மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நல்ல சாமி, முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் பசுமை தோழர் மகேஷ்குமார் ஆகியோர், மாணவர் களின் படைப்பாற்றலை பார்வையிட்டனர்.