districts

திருச்சி முக்கிய செய்திகள்

பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில்  தேடப்பட்ட 3 பேர் நீதிமன்றத்தில் சரண்

அரியலூர், டிச.9 - கும்பகோணம் அருகே மினி பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 3 பேர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோவிலைச் சேர்ந்தவர் சிவமணிகண்டன் (25). மினி பேருந்து ஓட்டுநரான இவரை, கடந்த சனிக்கிழமை அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 3 பேர் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். குற்றவாளிகளுக்கு இருசக்கர வாகனம் கொடுத்த சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். இதனையடுத்து சிவமணிகண்டனை கொலை செய்த 3 பேரை தனிப்படையினர் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் சிவமணிகண்டனை கொலை செய்த அய்யம்பேட்டை கிராமம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த சுந்தரேசன் (20), அய்யம்பேட்டை மதகடி பஜார் தெருவைச் சேர்ந்த பரமேஸ்வரன் (20), அய்யம்பேட்டை வெள்ளான் செட்டி தெருவைச் சேர்ந்த ராகுல் (18) ஆகிய மூன்று பேரும் திங்கள்கிழமை ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தனர். குற்றவியல் நீதிபதி ராஜசேகரன் முன்னிலையில் சரணடைந்த மூன்று பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கும்பகோணம்-திருவையாறு சாலையில் 
வேகத் தடை அமைக்கப்படுமா?
வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பாபநாசம், டிச.9 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையிலிருந்து கணபதி அக்ரஹாரம் செல்லும் சாலை முக்கிய சாலை யாகும். இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாக னங்கள் சென்று வருகின்றன. திருவையாறு, கும்ப கோணம் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்பவர்கள் இந்தச்  சாலை வழியே செல்கின்றனர்.  இந்த சாலை முடிவில் திருவையாறு செல்லும் சாலை,  கும்பகோணம் செல்லும் சாலைகள் பிரிகின்றன. கும்பகோணம் - திருவையாறு சாலையில் ஏராளமான  கிராமங்கள் உள்ளன. இந்தச் சாலையில் அரியலூரி லிருந்து சிமெண்ட் ஏற்றிக் கொண்டும், கரூர், பெரம்பலூரி லிருந்து ஜல்லிகள் ஏற்றிக் கொண்டும் ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன.  இந்த சாலை முடிவில், திருப்பத்தின் இருபக்கமும் ஒளிரும் வேகத் தடை அமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. வேகத் தடை இல்லாததால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, இங்கு நெடுஞ்சாலை துறை  சார்பில் வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்  அப்பகுதி பொதுமக்கள். இதேபோன்று புதிதாக கட்டப்பட்ட கணபதி அக்ரஹா ரத்தின் காவிரி பாலத்தில் இரவு நேரத்தில் இருளாக உள்ளதால், பொது மக்களின் நலன்கருதி மின் விளக்கு கள் அமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு அருகில் கல்குவாரிக்கு அனுமதி கூடாது!
பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி, டிச. 9- சாத்தான்குளம் அருகே விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு அருகில் புதிதாக அமையவிருக்கும் கல்குவாரியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் நெடுங்குளம் கிராமம் வேலன் புதுக்குளம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “எங்கள் கிராமம் சிறு குறு விவசாயிகளை உள்ளடக்கியது. இங்கு 120 குடும்பங்கள் விவசாயம் மற்றும் கால்நடைகளை வாழ்வாதாரமாக கொண்டு வசித்து வருகின்றனர். புதிதாக அமைக்கவிருக்கும் குவாரி ஊருக்கு மிக அருகில் 300 மீட்டருக்குள் அமைந்துள்ளது. குவாரி செயல்பட்டால் முழு கிராமமும் அழிந்து விடும் நிலைமை உருவாகும்.  இங்குள்ள நீர் ஆதாரங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும். கனிமவளங்களை எடுக்க வைக்கப்படும் வெடிகளால் ஏற்படும் அதிர்வு மற்றும் ஒலி மாசுபாட்டி னால் இங்குள்ள மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். கற்கள் விழுவதால் பயிர்கள்  மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படும். சிலிக்கான் கலந்த விஷவாயுவை நாங்கள் சுவாசிக்க நேரிடும்.  ஒரு கிராமமே அழிந்து போகும் சூழ்நிலை உருவாகி விடும். எங்களின் நிலையை கருத்தில் கொண்டு குவாரிக்கு உரிமம் வழங்காமல், நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை கலைந்திடுக!
நில அளவை அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

அரியலூர், டிச.9 - பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அரியலூர் மாவட்டத்திலுள்ள நான்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளா கங்களில் தமிழ்நாடு நில அளவை அலு வலர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூரில் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்துக்கு, அச்சங்கத்தின் கோட்டத் தலைவர் இரா.செல்வம் தலைமை வகித்தார்.  செந்துறையில் நிர்வாகி புகழேந்தி, ஆண்டி மடத்தில் கோட்டத் தலைவர் ராஜவேலு, ஜெயங்கொண்டத்தில் மாவட்டச் செயலர் பிரவீன் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில், களப் பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளை யும் கணக்கில் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். மனித திறனுக்கு ஏற்ற குறியீடு களை வரையறுக்க வேண்டும். சிறப்புத்  திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள்  மற்றும் பணிகளுக்கு கால நிர்ணயம் வழங்காமல், ஊழியர்கள் மீது பணிச் சுமையை சுமத்துவதையும், நியமன தள்ளு படிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை கடுமையாக நடத்துவதையும் கைவிட வேண்டும். குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும். சிறப்பு திட்டங்களில் நிலம் எடுப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணி யிடங்களில், நில அளவைக் களப்பணியாளர் களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.