districts

img

தேவராயன்பேட்டையில் வீடு கட்ட தோண்டிய போது 15 உலோகச் சிலைகள் கிடைத்தன

பாபநாசம், ஜூன் 14 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை ஊராட்சி, கோயில் தேவராயன்பேட்டை சிவன் கோயில் தெருவில் உள்ள முகமது பைசல் என்பவரின் மனையில் வீடு கட்டுவதற்காக வெள்ளியன்று ஜேசிபி மூலம் அஸ்திவாரம் தோண்டப்பட்டது. அப்போது 4 அடி தோண்டிய நிலையில், உலோகத்தால் ஆன சிலைகள் கிடைக்கத் தொடங்கின. சுமார் 2.75 அடி உயரமுடைய, உடைந்த நிலையில் பீடத்துடனான சோமாஸ்கந்தர், 2.25  அடி உயரமுடைய பீடத்துடனான சோமாஸ்கந்தர் அம்பாள், 1.25 அடி உயரமுடைய பீடத்துடன் ஸ்கந்தர், உடைந்த நிலையில் பீடத்துடன் 2 அடி உயரமுடைய பிரதோஷ நாயகர், 1.75 அடி உயரமுடைய பீடத்துடனான பிரதோஷ அம்பாள், உடைந்த நிலையில் பீடத்துடனான 1.75 அடி உயரமுடைய நடன திருஞானசம்பந்தர், 1.75 அடி உயரமுடைய பீடத்துடனான மாணிக்க வாசகர் சிலை, 2.50 அடி உயரமுடைய பீடத்துடனான சண்டீகேசுவரர் சிலை, 1.75 அடி உயரமுடைய பீடத்துடனான திருநாவுக்கரசர் சிலை, சுமார் 2.5 அடி உயரமுடைய பீடத்துடன் தாலியுடன் கூடிய சிவகாமி அம்பாள், 1.5 அடி உயரமுடைய பீடத்துடனான உடைந்த நிலையில் விநாயகர் சிலை, 1.5 அடி உயரமுடைய பீடத்துடனான அம்பாள் சிலை, சுமார் 1.75 அடி உயரமுடைய பீடத்துடனான கல்யாண சுந்தரேஸ்வரர் சிலை, சுமார் 2.75 அடி உயரமுடைய பீடத்துடனான தனி அம்மன் சிலை, 2.5 அடி உயரமுடைய பிரதோஷ நாயக திருவாச்சி, 0.75 அடி உயரமுடைய கிண்டி, மணி, அரை அடி உயரமுடைய கூஜா, சங்கு உள்ளிட்டவை கிடைத்தன. இவற்றை பாபநாசம் தாசில்தார் மணிகண்டன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் லெட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர். கிடைக்கப் பெற்ற சிலைகள் உள்ளிட்ட 20 பொருட்கள் பாபநாசம் தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டன.