அறநிலையத் துறை சார்பில் 14 ஜோடிகளுக்கு திருமணம் அமைச்சர் கே.என்.நேரு நடத்தி வைத்தார்
திருச்சிராப்பள்ளி, செப்.11 - 2023-2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை யின் அறிவிப்பின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலியுடன், சீர்வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப் பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 500 இணைகளுக்கு திருக்கோயில் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுத லாக மேலும் 100 இணைகளை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 இணைகள் வீதம், 600 இணைகளுக்கு திருமண விழா நடத்தி வைக்கப்படும் என இந்துசமய அறநிலையத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் திரு மண மண்டபத்தில் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங் களைச் சேர்ந்த 14 இணைகளுக்கு ஞாயிறன்று திருமணம் நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு ரூ.70,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநக ராட்சி மேயர் அன்பழகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிரகாஷ், இணை ஆணையர் (சமய புரம்) கல்யாணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை டிபிஎஸ் நகரில் சாலை அகலப்படுத்தும் பணிகள் தீவிரம் வீடுகளின் முன்பகுதிகள் இடித்து அகற்றம்
தஞ்சாவூர், செப்.11- சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக உள்ள மழைநீர் வடிகால் வாரி, புறம்போக்கில் கட்டப்பட்டிருந்த வீடுகளின் முன்பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன. தஞ்சாவூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் அனைத்தும் அகலப்படுத்தப்பட்டு, போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை சாலையையும், மருத்துவக் கல்லூரி சாலையையும் இணைக்கும் வகையில் டிபிஎஸ் நகரில் உள்ள மழைநீர் வடிகால் வாரியை ஒட்டியுள்ள 20 அடி சாலையை 80 அடி சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதையடுத்து அங்கு வாரி புறம்போக்கு பகுதியில் குடியிருந்து வருபவர்கள் தங்களது வீடுகள் இடிக்கப்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து 80 அடி சாலைக்கு பதில் 40 அடி சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. மேலும், டேனியல் தாமஸ் நகர் முதல் டிபிஎஸ் நகர் வரை சுமார் 2 கி.மீட்டர் தூரம் உள்ள மழைநீர் வடிகால் வாரி புறம்போக்கை ஒட்டியுள்ள 20 அடி சாலையை, 40 அடி சாலையாக மாற்றுவதற்கு, அங்குள்ள சில வீடுகளின் முன்பகுதிகள் இடையூறாக இருந்தன. இதனால் அந்த வீடுகளில் வசிப்பவர்களின் ஒத்துழைப்போடு, மாநகராட்சி நிர்வாகம் சாலையை அகலப்படுத்த இடையூறாக உள்ள பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றி வருகிறது. தஞ்சாவூர் மாநகராட்சி நகரமைப்பு அலுவலரும் உதவி செயற்பொறியாளருமான எம்.ராஜசேகரன் தலைமையில், மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
செப்.23 இல் திருச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருச்சிராப்பள்ளி, செப்.11 - கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்.23 (சனிக்கிழமை)அன்று திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறை போன்ற பல்வேறு தனியார் துறை களைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தகுதி யுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், இம்மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவ னங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன. 10 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்புகள் வரை கல்வித் தகுதியுடைய, 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு, அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் வேலை நாடுநர்கள், தமிழ்நாடு அரசின் என்ற https://www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க அமைப்பு தினம்
கரூர், செப்.11 - தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் 33 ஆவது அமைப்பு தினம் கரூர் மாவட் டத்தில் கொண்டாடப்பட்டது. அமைப்பு தின கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வ.கோபி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பொன்.ஜெயராம் சங்கத்தின் கொ டியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மு.செல்வராணி, மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழ கன், தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணி யாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சங்கர், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி, மாநில செயற்குழு உறுப்பினர் வி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை, செப்.11- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத் தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 422 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு
திருச்சிராப்பள்ளி, செப்.11 - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத் திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையை 2023 -2024 ஆம் நிதியாண்டு முதல் இரு மடங்காக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் 2023-2024 ஆம் நிதியாண்டில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகையை பெற்று பயன்பெற http://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
சீருந்துகள் பயன்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சிராப்பள்ளி, செப்.11 - திருச்சி மாவட்ட இயக்க மேலாண்மை அலகின்கீழ் செயல்படுத்தப்படும் TNSRLM, DDU-GKY,NRETP, NULM மற்றும் இதர திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள ஏதுவாக மாத வாடகை ரூ.35,000 இல், சீருந்துகளை ஒப்பந்த அடிப்படை யில் பயன்படுத்திட தகுதிவாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேற்படி விண்ணப்பங் களை 19.9.2023-க்குள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) மாவட்ட ஆட்சியரகம், திருச்சிராப்பள்ளி (0431-2412726) என்ற முகவரியில் நேரில் சமர்ப்பித்திட வேண்டு மென மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு கராத்தே தகுதிப் பட்டை வழங்கல்
தஞ்சாவூர், செப்.11- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள கிங்கு சிட்டோரியா ஸ்போர்ட்ஸ் கராத்தே டு இந்தியா தற்காப்பு கலை பயிற்சி பள்ளி சார்பில், மாணவர்களுக்கு தகுதிப் பட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் பி. பாரதிதாசன் தலைமை வகித் தார். தலைமை பயிற்சி யாளர் எஸ்.அன்பரசன் 60 மாணவ, மாணவிகளுக்கு கராத்தேயில், பல்வேறு வண்ணப் பட்டைகளை வழங்கினார். கராத்தே பயிற்றுநர்கள் எம்.சுரேஷ் குமார், ஒய்.ஆபிரகாம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக கராத்தே பயிற்சியாளர் டி.சிதம்பரம், தர்மாம்பாள் வீரப்பன் பப்ளிக் பள்ளி முதல்வர் எஸ்.அருளானந்தம், பாரதி வித்யாலயா பள்ளி தாளாளர் ஆர்.சுரேந்தர், தஞ்சா வூர் அன்னை வேளாங் கண்ணி கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் என்.பிர காஷ், மல்லிகா பர்னிச்சர் மேலாளர் எஸ்.ரவிக்குமார், இந்திய ஜனநாயக வாலி பர் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை. ஏசுராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாண வர்களை வாழ்த்தினர்.