districts

கைத்தறி ரகங்களின் 11 வகைகளை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை

தஞ்சாவூர், ஆக.14 -  

       கைத்தறி ரகங்கள் 11 வகைகளை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பேட்டு பார்டருடன் கூடிய  சேலை, பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி,  துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, ஜமக்காளம், உடை துணி, கம்பளி, சால்வை,  உல்லன் ட்வீட் மற்றும் சத்தார்க் ஆகிய குறிப் பிட்ட தொழில்நுட்ப குறியீடுகளுடைய ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது என்று கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ல் வரையறுக்கப்பட்டுள்ளது.

     விசைத்தறியில் தயாரிக்கப்பட்டு, கைத்தறி என போலியாக சில ஜவுளி விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப் படுவதாகவும், இதனால் தாங்கள் பாதிக்கப் படுவதாகவும் கைத்தறி நெசவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதைத் தடுக்கும்  வகையில் தற்போது பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

     இந்த பறக்கும் படைகள் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி கூடங்கள், தனியார் ஜவுளி  விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் திடீர்  ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மேற்படி  ஆய்வு மேற்கொள்ளும் போது, சட்டத்துக்கு  புறம்பாக ஜவுளி ரகங்கள் உற்பத்தியில் ஈடு படுதல், காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை  செய்தல் போன்ற நடவடிக்கைகளை கண்டறி யும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் உற்பத்தி மேற்கொள்ளும் விசைத்தறியாளர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதியப்படும்.

     மேலும், தனியாரிடம் கூலிக்கு நெசவு செய்யும் கைத்தறி நெசவாளர்கள் எதிர்கொள் ளும் இடர்பாடுகளை களையும் வகையில், தனியார் நெசவாளர்கள் வாழ்ந்து வரும் பகுதிக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு  கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில்  உறுப்பினராக சேர்ந்து வேலைவாய்ப்பை யும், அதற்கான ஊதியமும் பெற்று பயன டையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    ஒன்றிய, மாநில அரசுகள் மூலம் கூட்டுறவு  சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் பெற்று வழங்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற, திருச் செங்கோடு உதவி அமலாக்க அலுவல கத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூல மாகவோ (04288-258139) தொடர்பு கொள்ள லாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலையே அரியலூர் ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா-வும் தெரி வித்துள்ளார்.