கரூர்,ஜன.18- கரூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 10,77,348 பயனாளிகள் பயனடைந் துள்ளார்கள்.என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மீ.தங்கவேல்.இ.ஆ.ப. அவர்கள் தகவல் கரூர் மாநகராட்சி பெரிய குளத்துபாளையம், வெங்க மேடு ஆகிய பகுதிகளில் ஜனவரி 19 அன்று மருத்து வம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்க வேல் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களி டம் தெரிவிக்கையில், கரூர் மாவட்டத்தில் மக்க ளைத் தேடி மருத்துவம் திட்டம் முதற்கட்டமாக 5.8.2021 அன்று அரவக் குறிச்சி வட்டாரத்தில் செயல் படுத்தப்பட்டு, படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு அனைத்து வட்டாரங்கள் மற்றம் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங் கள், அரசு மருத்துவமனை கள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை களிலும் சேவைகள் வழங் கப்படுகின்றன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத் தின் ஒவ்வொரு பயனாளி யும் மக்கள் நல பதிவில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவர். இத்திட்டம் துவங்கப் பட்டு 18.01.2024 வரை உயர் இரத்த அழுத்த நோய் சிகிச்சை மருந்துகளை பெற்றவர்கள் 1,20,725 சேவைகளையும் தொடர் சேவைகள் 3,19,533 பய னாளிகளும், நீரிழிவு நோய் சிகிச்சைக்கான மருத்து களை பெற்றவர்கள் 65,521 சேவைகளையும் தொடர் சேவைகள் 2,70,297 பய னாளிகளும், உயர் இரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சைக்கான மருந்துகளை பெற்றவர்கள் 51,711 சேவைகளையும் தொடர் சேவைகள் 1,89,616 பயனாளிகளும், நோய் ஆதரவு சிகிச்சை பெற்ற வர்கள் 10,436 சேவைகளை யும் தொடர் சேவைகள் 13,172 பயனாளிகளும், இயன்முறை சிகிச்சை சேவைகள் பெற்றவர் 17,651 முதன் முறை சேவைகளை யும், தொடர் சேவைகள் 18,678 பயனாளிகளும், 3 பயனாளிகள் முதன் முறை சேவைகளையும், 5 தொடர் சேவைகளும் மொத்தம் 2,66,047 பயனாளிகள் முதன் முறை சேவைகளையும், 8,11,678 பயனாளிகள் தொடர் சேவைகளும் பெற்று பயனடைந்துள்ளனர்.ஆக மொத்தம் 10,77,348 பயனாளிகள் பயனடைந்துள் ளார்கள் என்று என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரி வித்தார். இந்கழ்ச்சியின் போது துணை இயக்குநர் (சுகாதார பணிகள்).மரு.சந் தோஷ்குமார், மருத்துவர் கள் மற்றும் செவிலியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.