districts

திருச்சி முக்கிய செய்திகள்

1,070 கிலோ குட்கா பொருட்கள்  பறிமுதல்: இருவர் கைது

தஞ்சாவூர், அக்.28 - தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம், ஊரணிபுரம் ஆகிய பகுதி களில் கஞ்சா, குட்கா புழக்கம் அதிகளவில் இருப்பதாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருவோணம் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். மேலும், இரவு நேரங்களில் ரோந்து பணிகளை அதிகரித்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், திருவோணம் அருகே நரங்கியப்பட்டு பகுதியில் குடோன் ஒன்றில் குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்கு அதிக ளவில் வைத்திருப்பதாக, ஒரத்தநாடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷஹானாஸ்க்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், ஒரத்தநாடு காவல்துறை ஆய்வாளர் சுதா தலைமையில், திருவோணம் காவல்துறை உதவி ஆய்வாளர் விஷ்ணு பிரசாத் அடங்கிய தனிப்படையினர் நரங்கியப்பட்டு பகுதியில் வீடு ஒன்றில் டாடா ஏஸ் வேனில் இருந்து இறக்கிய 430 கிலோ  குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.  இதையடுத்து அங்கிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி யைச் சேர்ந்த ரஹமதுல்லா (48), தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அதம்பை கிராமத்தை சுரேஷ் (42), ஆகியோரை பிடித்த னர். இது தொடர்பாக, திருவோணம் காவல்துறையினர் ரஹமதுல்லா விடம் நடத்திய விசாரணையில், ஆலடிக்குமுளையில் உள்ள திப்பன்வி டுதியைச் சேர்ந்த முகமது அப்துல்லா (33), என்பவருக்குச் சொந்தமான  குடோன் ஒன்றில், 640 கிலோ குட்கா பொருட்களை வைத்திருப்பதாக கூறினார். அதன்பேரில் அங்கிருந்த குட்காவையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 1,070 குட்கா பொருட்களையும், டாடா ஏசி வாகனத்தையும் பறிமுதல் செய்து, ரஹமதுல்லா மற்றும் சுரேஷ் இருவரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய முகமது அப்துல்லாவைத் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 1,070  குட்கா பொருட்களின் மதிப்பு சுமார் 7 லட்சம் ரூபாய் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தண்ணீரில் மூழ்கி அக்கா, தங்கை பலி

புதுக்கோட்டை, அக்.28 - புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த களம்மாவூர் அருகே கண்ணக்கோண்பட்டியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தன் மகள்களான காயத்திரி (14), கவிஸ்ரீ(4) ஆகிய இரண்டு பேரையும் சாமி  கும்பிட வீட்டின் அருகே உள்ள காளியம்மன் கோவிலுக்கு அனுப்பி விட்டு கீரனூர் சென்றுள்ளார்.  வெகுநேரம் கழித்தும் அவர்கள் வீட்டிற்கு வராததால் கோவிலுக்கு  செல்லும் பாதையில் தேடியுள்ளனர். அப்போது குளத்தில் நீரில் மூழ்கி கவிஸ்ரீ இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவி னர்கள் காயத்திரியை தண்ணீரில் இறங்கி தேடினர். பின்னர் காயத்திரி  குளத்தில் உள்ள மண் வெட்டிய பள்ளத்தில் மூழ்கி இருந்ததை கண்டு  கரைக்கு கொண்டு வந்தனர். இருவரையும் மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்து  திங்களன்று  உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து  மாத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முழுமையாக வழங்குக! திருநாகேஸ்வரத்தில் மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், அக்.28- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முழுமையாக வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் களுக்கு மடிக்கணினி மற்றும் அரசு நலத்திட்ட  உதவிகளை முழுமையாக வழங்க வேண்டும். அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவ-மாணவி யர்களுக்கு தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொ கையை முறையாக வழங்க வேண்டும். அரசுப் பள்ளியில் ஆசிரியர் காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும். அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும். கல்வி நிலை வளாகங்களுக்கு செல்வதற்கு பேருந்து  வசதியை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கடை வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் திருநாகேஸ்வரம் கிளைச் செயலாளர் மகாராஜா தலைமை வகித்தார். கிளைத் தலைவர் தருண் துவக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ராகுல் விளக்க உரையாற்றி னார். கிளை உறுப்பினர் நித்திஷ் நன்றி கூறி னார்.

நடிகர் விஜய் பாஜகவின் ‘சி’ டீம்  அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம்

புதுக்கோட்டை, அக்.28 - நடிகர் விஜய் பாஜகவின் சி டீம் என்றார்  மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.   புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில், “திமுக ஆட்சியின் கொள்கைகளைத் தான் நடிகர் விஜய் தனது மாநாட்டில் கொள்கையாக அறிவித்திருக்கிறார். இது வரை பல அரசியல் கட்சிகளுடைய ஏ டீம், பி  டீம் பார்த்துள்ளோம். நடிகர் விஜய், இது இரண்டும் இல்லை என்கிறார். மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள ஆளுநரைப் பற்றி அவர் பேசியுள்ளாரே தவிர, விஜய் பாஜகவின் சி டீம்தான், விஜய் தொடர்ந்து மக்களைச் சந்திக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் வேட்பா ளர்களை நிறுத்த வேண்டும். மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும். பெரும் பான்மை பெற்று ஆட்சிக்கு வர வேண்டும். அதன்பிறகுதான் ஆட்சியில் பங்கு என்ப தெல்லாம். திமுக கூட்டணியைவிட்டு யாரை யும் பிரித்துவிட முடியாது. ஊழலைப் பற்றி பேசுபவர், ஏற்கெ னவே ஆண்ட கட்சியைப் பற்றிச் சொல்ல வில்லையே எனக் கேட்கிறீர்கள். அதிமுகவை  அவர் ஒரு கட்சியாகவே பார்க்கவில்லை என்பது தெரிகிறது. அதிமுக தொண்டர் களை இழுக்க வேண்டும் என்பதற்காகத் தான் அக்கட்சியைப் பற்றி அவர் குறிப்பிட வில்லை. அதன்மூலம் பாஜகவை வலுவூட்ட  வேண்டும் என்பதுதான் விஜய்யின் குறிக்கோள். தமிழ்நாட்டு அரசியலில் அண்ணா, பெரி யார், கருணாநிதி வரிசையில் தவிர்க்க முடி யாத சக்தியாக ஸ்டாலின் இருக்கிறார். இந்தி யாவிலேயே சிறுபான்மையினர் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது திமுக ஆட்சி. நடிகர் விஜய் நடத்திய மாநாடு எங்களைப் பொறுத்தவரை திரைப்படம் குறித்த மாநாடு தான்” என்றார்.

குற்றங்களைத் தடுக்க 24 மணி நேர கண்காணிப்பு --  திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார் பேட்டி

திருச்சிராப்பள்ளி, அக்.28 - திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் வருண்குமார் திங்களன்று செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டி கையையொட்டி திருவெறும்பூர், கொள்ளி டம், சமயபுரம், முசிறி, துறையூர் மற்றும் மணப்பாறை பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்கா ணிப்பு செய்யப்படுகிறது. மேலும், பொது மக்களிடம் திருடுபவர்களை உடனுக்குடன் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படு கிறது. சீருடை இல்லாத போலீசாரும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படியான நபர்களை பொது மக்கள் பார்த்தால், உடனடியாக மாவட்ட காவல் அலுவலக உதவி மையத்தில் உள்ள தொலைபேசி எண்ணிற்கு 94874 64651 தகவல் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளி யூருக்குச் சென்றால் மேற்கண்ட எண்ணிற்கு  தகவல் தெரிவிக்க வேண்டும். குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளி களை கண்டுபிடிப்பதற்கும் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், காவல் ஒத்திணை கண்காணிப்பாளர் மேற்பார் வையில் 24 ஆய்வாளர்கள், 45 உதவி ஆய்வா ளர்கள், 500 சட்ட-ஒழுங்கு காவலர்கள் மற்றும் 50 ஆயுதப்படை காவலர்களை நிய மித்து, மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் தீபாவளியை ஒட்டி, மாவட்டத்தில் போக்குவரத்தை சீர்படுத்த 100  போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப் பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஆரியப்படையூர் மேலக்குளத்தில்  விடப்பட்ட மீன் குஞ்சுகள்

கும்பகோணம் அக்.28 -  2024 -2025 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானிய கோரிக்கையில் 2024 மே 22 அன்று, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியினை அதிகரித்திட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கும்பகோணம் தொகுதி ஆரிய படைவீடு ஊராட்சியில் உள்ள மேலக்குளத்தில் வளர்ப்புக்காக கட்லா, ரோகு, மிருகால் ஆகிய மூன்று வகையான மீன் குஞ்சுகள், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் தலைமையில் விடப்பட்டன..