மயிலாடுதுறை, அக்.13 - செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் தன்னி றைவு பெற்றதாக திகழ் கிறது என மயிலாடு துறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் தன்னி றைவு பெற்ற முன்மாதிரி ஊராட்சி ஒன்றியமாக திகழ்ந்து வருகிறது. ஒன்றி யத்தில் அனைத்து கிராமங் களிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், சிமெண்ட் சாலை கள், தார்ச்சாலைகள், வகுப் பறை கட்டிடம், சமுதாயக் கூடம், மயான கொட்டகை உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. சூரியஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், ஆதிதிராவிடர் குடியிருப்பு களுக்கு அடிப்படை வசதி கள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தூய்மை பாரத இயக்கம், அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், 15 ஆவது மத்திய நிதி குழு மானிய திட்டம், அரசு பள்ளி களில் அடிப்படை உள்கட்ட மைப்பு மற்றும் தூய்மை புனரமைப்பு திட்டம், திறன் மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) திட்டங்கள் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. மேலும் விடுபட்ட பணி களுக்கு திட்ட மதிப்பீடு செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. விரைவில் அப்பணியும் நிறைவேற்றி தரப்படும். தமிழ்நாடு முதல மைச்சர் கொண்டு வரும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோரின் ஆதரவோடு நிறைவேற்றி கொடுக்கப் பட்டு உள்ளது. செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் தன்னி றைவு பெற்ற ஊராட்சி ஒன்றி யமாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.