districts

போக்சோ வழக்கில் சுரபி கல்லூரி தாளாளருக்கு சிறைத்தண்டனை

திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில்  சுரபி கல்லூரி தாளாளர் ஜோதி முருகனுக்கும் விடுதிக் காப்பாளர் அர்ச்சனாவிற்கும் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ள தீர்ப்பை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ் .வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி அருகே  சுரபி நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு பயிலும் மாணவிகள் பலருக்கு கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியர்கள். தாளாளர் மீதும், விடுதிக் காப்பாளர் அர்ச்சனா மீதும்   நடவடிக்கை எடுக்கக் கோரி  தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

புகார் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படாத காரணத்தினால் கல்லூரி மாணவர்கள் 2021 இல் திண்டுக்கல் பழனி புறவழிச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டங்கள் தீவிரம் அடையவே ஜோதி முருகன் தலைமறைவாகிவிட்டார். உடனே தாளாளர் ஜோதி முருகன் மற்றும் விடுதி காப்பாளர் அர்ச்சனா ஆகியோர்  மீது போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். டி.ஐ.ஜி விஜயகுமார் உத்தரவின் பேரில் தாளாளர் ஜோதி முருகனை கைது செய்ய ஐந்து தனிப்படை குழுக்கள் அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் ஜோதி முருகன் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல்லில் மகிளா நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன், தாளாளர் ஜோதி முருகனுக்கு 15 நாட்களில் ஜாமீன் வழங்கி வடமதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.  

ஜோதி முருகனின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாதர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பி. சுகந்தி  பெயரில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் நிர்மலா ராணி  மூலம் மனு தாக்கல்செய்யப்பட்டது.

ஆறுதலான தீர்ப்பு
அதன் பிறகு  ஜாமீன் ரத்து செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். கடந்த மூன்று ஆண்டு களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம், சாமானிய மக்களும் பாதிக்கப்பட்ட  மாணவிகளும் ஆறுதல் படும் வகையில் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத் தக்கது.

சுரபி கல்லூரியின் தாளாளர் ஜோதி முரு கனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை. 75 ஆயிரம் ரூபாய் அபராதமும், விடுதிக் காப்பாள ராக இருந்த அர்ச்சனாவிற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம்  அபராதம் விதித்து நீதிபதி கருணாநிதி  தீர்ப்பளித்தார். இத்தகைய தீர்ப்பு பள்ளி, கல்லூரி, கல்வி  வளாகங்களில் மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை கொடுக்கும் பாலியல் குற்றவாளி களுக்கு தகுந்த அடி கொடுப்பதாக இருக்கும். ஜோதி முருகன் தனது பணபலம், அரசியல் பலத்தை பயன்படுத்தி காவல்துறையையும் போராடும் மாணவர்கள் மற்றும் மாதர் சங்கத்தை சார்ந்தவர்களை அச்சுறுத்தி வந்தார். கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் கொடுத்த உடனேயே அவர்கள் நடத்திய போரா ட்டங்கள் அனைத்திலும்   அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக் குழு உடன்  இருந்தது.

மாதர் சங்கம், மாணவர் சங்கம், வாலிபர் சங்கத்தின் சார்பாகவும் நீதி மன்றத்தின் முன்பும் கல்லூரி வளாகத்திற்கு முன்பும் பொது இடத்திலும் தொடர்ந்து போராட்டங் கள் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதர வாகவும் குற்றவாளிகளை உடன் கைது செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியும் நடைபெற்றது.  இவ்வழக்கு வெற்றி பெற அனைத்து சட்ட  ஆலோசனைகளையும் கொடுத்ததுடன் நேரடி யாக  உடன் நின்று வழிகாட்டிய  உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நிர்மலா ராணியின் பணி பாராட்டுக்குரியது.

மாநில துணைத்தலைவர் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி மீதும் மாவட்டச் செயலாளர் ஜி. ராணி, மாவட்டத் தலைவர் ஜானகி, மாநிலக்குழு உறுப்பினர் வனஜா உள்ளிட்டவர்களின் மீதும் வழக்கு பதிவு  செய்யப்பட்டு இன்றுவரை நிலுவையில் உள் ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்த போதிலும்  தாளாளருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று களத்தில் நின்று உறுதியாகப் போராடிய மாதர் சங்க சகோதரிகளுக்கும் உதவிய வழக்க றிஞர் நிர்மலா ராணிக்கும் போராட்டங்களை திட்ட மிட்டு வழி நடத்திய கே. பாலபாரதிக்கும்  ஜனநா யக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு சார்பாக பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

நீதிபதிக்கு பாராட்டு
தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பொழுதும் கூட   உடனடி தீர்வு வரு வது என்பது இல்லை. ஆனால் திண்டுக்கல் சுரபி கல்லூரி தாளாளருக்கும்  விடுதி காப்பாளர் அர்ச்ச னாவிற்கும் உரிய தண்டனையும் அபராதம் வழங்கிய நீதிபதி கருணாநிதி அவர்களுக்கு ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக பாராட்டுக் களை தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப் படும் மாணவியர்கள் அச்சமின்றி பள்ளி, கல்வி  வளாகங்களில் பயில்வதற்கு ஏதுவான கல்விச்  சூழலை உருவாக்குவது என்பது அரசாங்கத்தின் கடமை.

கல்வி வளாகங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்துக! 
பாலியல் வழக்குகள் முன்வரும்பொழுது, ஜாமீன் வழங்காமல்  விசாரணையை தீவிரப் படுத்தி உரிய காலத்தில் வழக்குகளை முடிப்ப தற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இருக்கும் அனைத்து கல்வி வளாகங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும். உள்  விசார ணைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதி, பெண்களுக்கான ஓய்விட வசதி  உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து பாதுகாப்பான கல்வி பெறுவதற்கான சூழ்நிலை உருவாக்குவது அவசியம் என்று ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கருதுகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.