நத்தம், ஜூன் 20- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி கோபால்பட்டி - வேம்பார்பட்டியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சாணார்பட்டி ஒன்றிய நான்காவது மாநாடு நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ராணி, மாநில துணைத் தலைவர் அமிர்தம், மாநிலக்குழு உறுப்பினர் வனஜா ஆகி யோர் பேசினர். மாநாட்டில் ஒன்றிய தலைவராக ஈஸ்வரி, செயலாளராக பாப்பாத்தி, பொருளாளராக பழனியம்மாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கிராமப்புறங்களில் கள்ள மது விற்பனையை தடுக்க வேண்டும். மாம்பழ கூழ் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை முறையாக வெளியேற்ற வேண்டும். குடும்ப தலைவிக்கு அரசு அறிவித்த ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.